தெலுங்கு சினிமாவின் முக்கிய நபர் செருகுரி ராமோஜி ராவ் மரணம்..

by Editor News

உலகளவில் மிகப்பெரிய பிலிம் ஸ்டூடியோவாக இருக்கிறது ராமோஜி ராவ் பிலிம் சிட்டி. பாகுபலி, சென்னை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல திரைப்படங்கள் இதில் படமாக்கப்பட்டுள்ளது.

பிரமாண்ட செட்கள் அமைத்து எடுக்கப்படும் இந்த இடம் தான் உலகில் மிகப்பெரிய பிலிம் சிட்டி மற்றும் தீம் பார்க் என கூறுகின்றனர். இதனுடைய உரிமையாளர் தான செருகுரி ராமோஜி ராவ். இவர் தயாரிப்பாளரும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

மரணம் :

கடந்த 1936ஆம் ஆண்டு பிறந்த இவர், இன்று ஜூன் 8ஆம் தேதி தனது 87 வயதில் மரணமடைந்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. வயது மூப்பு மற்றும் உடல்நல குறைவு காரணமாக கடந்த சில நாட்களாகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 4மணிக்கு ராமோஜி ராவ் இறந்துள்ளார். இவருடன் மரண செய்தி திரையுலகினர் மட்டுமின்றி ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts

Leave a Comment