ரோகினி மகனை டார்ச்சர் செய்யும் விஜயா!

by Editor News

ரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் மக்களின் பேராதரவை பெற்று எப்பொழுதும் டிஆர்பியில் உச்சத்தில் இருப்பது தான் சிறகடிக்க ஆசை சீரியல்.

முத்து, மீனா ஆகிய இருவரின் வாழ்க்கையில் நடக்கும் எதார்த்த குடும்ப கதையாகும். இரண்டு மகன்கள் மீது பாசமாக இருக்கும் தாய்க்கு முத்துவை மட்டும் பிடிக்காமல் போயுள்ளது.

இதற்கான காரணத்தை சீரியல் தரப்பினர் சீக்ரெட்டாகவே வைத்துள்ளனர். மற்றொரு புறம் பூக்கடை நடத்திவரும் குடும்பம் தான் மீனாவின் குடும்பம்.

முத்துவிற்கும், மீனாவிற்கும் திருமணம் நடைபெற்ற நிலையில், இவர்கள் வாழ்க்கையில் சந்திக்கும் நிகழ்வுகளை வெளியிட்டு வருகின்றனர்.

மனோஜின் மனைவி ஏற்கனவே திருமணமானவர் என்பதை அனைவரிடமும் மறைத்து வந்த நிலையில், தற்போது அவரது மகனை முத்து வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

ரோகினி தான் தனது தாய் என்பதை கிரிஷ் அறிந்து கொண்டுள்ள நிலையில், விஜயாவின் வீட்டில் கிரிஷும் அவரது தாயும் இருந்து வருகின்றனர்.

இவர்கள் இருவரையும் வெளியேற்ற விஜயா ரோகினியுடன் திட்டமிட்ட நிலையில், ரோகினி தனது மகனை வெளியே அனுப்ப முடியாமல் தவித்து வருகின்றார்.

வீட்டைவிட்டு இன்னும் வெளியேறாத கோபத்தில் விஜயா கிரிஷை பிடித்து கீழே தள்ளிவிடுகின்றார். ரோகினி என்ன செய்வது என்பது தெரியாமல் தவித்து வருகின்றார்.

Related Posts

Leave a Comment