தேர்தல் முடிவுகளில் சந்தேகம் இருந்தால் நீதிமன்றத்தை நாடலாம் – சத்யபிரதா சாஹூ

by Editor News

தேர்தல் முடிவுகளில் சந்தேகம் இருந்தால் நீதிமன்றத்தை நாடலாம் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், விருதுநகரில் விஜய பிரபாகரன் தோற்கவில்லை; தோற்கடிக்கப்பட்டுள்ளார். வீழ்ச்சி அடையவில்லை; வீழ்த்தப்பட்டுள்ளார். தோல்வியை முழு மனதாக மக்கள் தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறோம். தமிழகத்தின் அனைத்து மக்களுக்கும் இது தெரியும். திட்டமிடப்பட்டு சூழ்ச்சியால் அவர் வீழ்த்தப்பட்டார் . அதற்கான ஆதாரங்கள் உள்ளது .விருதுநகரில் மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளோம் என்றார்.

இந்நிலையில் இதுதொடர்பாக கருத்து தெரிவித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, தேர்தல் முடிவுகளில் சந்தேகம் இருந்தால் நீதிமன்றத்தைதான் நாட முடியும்; விருதுநகர் தொகுதி தொடர்பான தேமுதிக புகார் இதுவரை வரவில்லை என்றார்.

Related Posts

Leave a Comment