எழிலுக்கு ரூட் விட்ட டீச்சர்… அடித்து தலைதெறிக்க ஓட விட்ட இந்து..

by Editor News

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கவின் கண்ணை மூடி கொட்டி கிடக்கும் பெயிண்டை வைத்து தனது கையால் அம்மா போட்டோவை வரைந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, கவின் அம்மாவை வரைந்து இருப்பதை பார்த்து எல்லாரும் ஆச்சரியமடைய எழில் ஓடி போய் அவனை கட்டி பிடித்து முத்தமிட்டு கண் கலங்குகிறான்.

இதனை தொடர்ந்து எழிலை பார்த்து விடும் டீச்சர் ஒருவர், மீண்டும் மீண்டும் வந்து அவனிடம் பேசி வழிய, இதை இந்து பார்த்து விடுகிறாள். என் புருஷன் கிட்டயா வழிய வழிய பேசுற என்று கோபப்பட்டு தீபாவை வைத்து டீச்சருக்கு அடி கொடுத்து ஓட விடுகிறாள், அடுத்து அபி டிரஸ் கம்பிட்டேஷனில் கலந்து கொள்ள தயாராகிறாள்.

இதற்காக செலக்ட் செய்து வைத்திருந்த ட்ரஸ்ஸை மனோகரி கத்தரி வைத்து கிழித்து விடுகிறாள். இதை அஞ்சலி பார்த்து விடுகிறாள். பிறகு அபியின் டிரஸ் கிழிந்து கிடப்பதை பார்த்து அனைவரும் அதிர்ச்சியாக அஞ்சலி மனோகரி ஆண்ட்டி தான் ட்ரெஸ்ஸ கிழிச்சாங்க, நாம ஜெயிக்க கூடாதுனு தான் இப்படி பண்ணி இருக்காங்க என்று சொல்ல இந்து சுடரிடம் அந்த ட்ரெஸ்ஸை நான் சொல்ற மாதிரி தைக்க சொல்ல சுடரும் அப்படியே தைக்கிறாள்.

மனோகரி அபி மேடை ஏற மாட்டா, அப்படியே ஏறினாலும் கிழிந்து போன துணியுடன் தான் ஏறுவா என்று சொல்லி கொண்டிருக்க அபி மேடை ஏற எல்லாரும் அவளது ட்ரெஸ்ஸை பார்த்து வாவ் என்று வாயை துறக்கின்றனர். இதனால் மனோகரி ஷாக்காகிறாள், இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைகாட்சியில் மிஸ் பண்னாம பாருங்க.

Related Posts

Leave a Comment