விடுதலையான ஷண்முகம்… முத்துப்பாண்டியை சஸ்பெண்ட் செய்த DSP

by Editor News

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சண்முகத்தை என்கவுண்டரில் போட்டு தள்ள பிளான் போட முப்பிடாதி மூலமாக பரணிக்கு விஷயம் தெரிய வந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, ஷண்முகம் ஸ்டேஷனலில் வயிறு வலியில் துடிப்பது போல் ட்ராமா போட்டு பொருட்களை தூக்கி போட்டு உடைக்க, முத்துப்பாண்டி சாப்பிட என்னடா குடுத்தீங்க என்று கோபப்பட, கான்ஸ்டபிள் உங்களுக்கு கொடுத்த டீ தான் கொடுத்தோம் என்று சொல்கின்றனர். அதன் பிறகு சண்முகத்தை ஹாஸ்பிடலுக்கு அழைத்து செல்ல வெளியே கூட்டி வர, DSP வந்து இறங்கி ஷாக் கொடுக்கிறார்.

எதுக்கு கைது பண்ணீங்க? எங்க கூட்டிட்டு போறீங்க என்று கேள்வி மேல் கேள்வி கேட்க, முத்துப்பாண்டி குடிநீரில் விஷத்தை கலந்ததுக்காக கைது செய்ததாக சொல்ல, ஆதாரம் இருக்கா என்று கேட்க, முத்துப்பாண்டி இல்லை என்று சொல்கிறான். பிறகு எதுக்கு விலங்கு மாட்டி இருக்கு, கழட்டு என்று கழட்ட சொல்கிறான். அடுத்து எங்க கூட்டிட்டு போற என்று கேள்வி கேட்க, நடுவரிடம் ஒப்படைக்க செல்வதாக சொல்ல, ஜட்ஜ் பெயரை கேட்க. முத்துப்பாண்டி ஓரு பெயரை சொல்ல, அவர் ரிட்டையர் ஆகி ஒரு வருஷம் ஆகுது என்று DSP முத்துபாண்டிக்கு ரைடு விடுகிறார்.

பிறகு பரணி சிசிடிவி ஆதாரத்தை காட்டி சண்முகத்தின் மீது தவறு இல்லை என்று நிரூபிக்க, முத்துப்பாண்டி சஸ்பெண்ட் செய்து சண்முகத்தை விடுவிக்கிறார் DSP. பிறகு ரிலீசான ஷண்முகம் முத்துபாண்டியை கிண்டல் அடித்து விட்டு அங்கிருந்து கிளம்புகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மிஸ் பண்ணாம பாருங்க.

Related Posts

Leave a Comment