ஆனந்தி கழுத்தில் தாலி கட்டினானா நந்தா? சிங்கப்பெண்ணே சீரியலில் நடந்த எதிர்பாராத ட்விஸ்ட்.!

by Editor News

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடரான, சிங்கப்பெண்ணே சீரியல் குறித்த இன்றைய ப்ரோமோ வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரிக்க செய்துள்ளது.

கடந்த ஆண்டு துவங்கப்பட்ட சிங்கப்பெண்ணே சீரியல், ஓரிரு வாரங்களிலேயே டாப் 5 TRP ரேட்டிங் பட்டியலில் இடம்பிடித்தது. தற்போது இந்த தொடர்தான் TRP தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. தர்ஷன் கிருஷ்ணா என்பவர் இயக்கும் இந்த சீரியல் தன்னுடைய குடும்பத்திற்காக சென்னைக்கு வந்து கார்மெண்ட்ஸ் ஒன்றில் வேலை செய்து கொண்டு கஷ்டப்படும் கிராமத்து பெண்ணை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த தொடரில் மனீஷா மகேஷ் கதாநாயகியாக ஆனந்தி என்கிற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தர்ஷக் கவுடா (மகேஷ்), அமல் ஜித் (அன்பு) ஆகிய இரண்டு கதாநாயகர்கள் நடித்து வருகிறார்கள்.

ஆனந்தி அழகன் என்று முகம் தெரியாத (அன்புவை) காதலிக்க, மகேஷ் ஆனந்தியை உயிருக்கு உயிராக காதலிக்கிறார். மகேஷை காதலித்து வரும் மித்ரா எப்படியும் ஆனந்தியை மகேஷ் வாழ்க்கையில் இருந்து விரட்ட வேண்டும் என்பதற்காக, பிளே பாய்யான நந்தாவை செட் பண்ணி ஆனந்தியை அழகன் என்கிற பெயரை சொல்லி காதலிக்க ஏற்பாடு செய்கிறார்.

நந்தாவை, அழகன் என நம்பி அவரை ஆனந்தி திருமணம் செய்து கொள்ள துணிகிறார். இந்த விஷயத்தை எப்படியோ அன்பு, ஆனந்தியின் தோழிகள் மூலம் கண்டு பிடிக்க… நந்தா எந்த கோவிலில் கல்யாணம் செய்து கொள்ள போகிறார் என்பதையும் தெரிந்து கொண்டு அவரை காப்பாற்றுவதற்காக புறப்படுகிறார்.

இன்று வெளியாகியுள்ள புரோமோவில் தான் அந்த ட்விஸ்ட்டே இருக்கு. நந்தா திருமணம் செய்து கொள்ளும் நேரத்தில் தாலியை பிடுங்கி நீ தான் அழகன் என சொன்னால் நான் நம்பி விடுவேனா? என கேட்கிறார்.

ஆனால் வலுக்கட்டாயமாக ஆனந்தியை திருமணம் செய்து கொள்ள நினைக்கும் போது அன்பு அங்கு ஓடி வருகிறார். அன்பு ஆனந்தியை காப்பாற்றா… மகேஷ் ஆனந்தியிடம் காதலை கூறுவாரா? என்கிற பரபரப்பான தருணங்களுடன் இன்றைய புரோமோ வெளியாகியுள்ளது.

Related Posts

Leave a Comment