காதலில் விழும் இனியா! ஜெனியை பிரமிக்க வைத்த செழியன்…

by Editor News

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கிலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், டிஆர்பி-யிலும் முன்னணியில் இருந்து வருகின்றது.

வீட்டில் எந்தவொரு பிரச்சினையாக இருந்தாலும் சமாளித்து கெத்து காட்டி வருகின்றார் பாக்கியா. ராதிகாவின் கர்ப்பத்தால் கோபியை அனைவரும் வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளனர்.

கோபியுடன் சேர்ந்து அவரது தாய் ஈஸ்வரியும் ராதிகாவின் வீட்டிற்கு வந்துள்ளார். தற்போது ராதிகா வீட்டில் ஈஸ்வரியை இருப்பதற்கு அனுமதிக்காமல் கோபியிடம் சண்டையிட்டு வருகின்றனர்.

செழியன் வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்து மாட்டிக்கொண்டதிலிருந்து ஜெனி அவரை பல கேள்விகளை கேட்டு மனதை புண்படுத்தி வந்தார்.

மனைவியின் மனதில் இருக்கும் தவறான கருத்தை போக்க செழியன் அவரை ஸ்டார் ஹோட்டலுக்கு அழைத்து வந்து விருந்து வைக்கின்றார். இதனை அவதானித்த ஜெனி பிரமித்து போயுள்ளார்.

மற்றொரு புறம் இனியாவிற்கு ப்ராஜெக்ட் செய்து கொடுத்து பழனிச்சாமியின் மருமகன் இம்ப்ரஸ் செய்து வருகின்றார்.

Related Posts

Leave a Comment