மீண்டும் மிருகமாகிய கதிர், ஞானம்! குழந்தையை வைத்து மிரட்டும் சோகம்..

by Editor News

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் பல திருப்பங்கள் அரங்கேறி வருகின்றது.

பெண்களின் அடிமைத்தனத்தை மையமாக எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியல் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.

குறித்த சீரியல் பரபரப்பாக சென்று கொண்டிருந்த நிலையில், கடந்த ஆண்டு சீரியலின் நாயகனான குணசேகரன் திடீர் மாரடைப்பினால் உயிரிழந்த நிலையில் அவருக்கு பதில் நடிகர் வேல ராமமூர்த்தி நடித்து வருகின்றார்.

குறித்த சீரியல் விரைவில் முடிவடைய உள்ள நிலையில், குணசேகரன் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் கதிர், ஞானம் இருவரும் அடுத்தடுத்து குணசேகரனுக்கு ஆதரவாகவும், மனைவிக்கு எதிராகவும் நின்று வருகின்றனர்.

ஞானம் குழந்தையை வைத்து ரேணுகாவை மிரட்டி வருகின்றார். கதிர் ஈஸ்வரியை தவறாக பேசியதால் தர்ஷன் கோபத்தில் ஆழ்ந்துள்ளார்.

குறித்த சீரியலின் முடிவு எவ்வாறு அமையும் என்பதை தெரிந்து கொள்வதற்கு ரசிகர்களும் ஆர்வமாக இருக்கின்றனர்.

Related Posts

Leave a Comment