1 மணி நேரத்துல உன் வேலைக்கு ஆப்பு வைக்குறேன்டா… முத்துப்பாண்டியிடம் சவால் விட்ட பரணி..

by Editor News

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பரணி முத்துபாண்டியிடம் இன்னும் 1 மணி நேரத்தில் உன் காக்கி சட்டையை கழட்டி உட்கார வைக்கிறேன் என்று சவால் விட்டு வந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, பரணி சவால் விட்டதை தொடர்ந்து முத்துப்பாண்டி உன்னால முடிந்ததை பார்த்துக்கோ டி என்று சொல்ல பரணி நடக்க போறதை பார்க்க தான டா போற என்று அங்கிருந்து வெளியே வருகிறாள். இதனையடுத்து நேராக சௌந்தரபாண்டி வீட்டிற்கு சென்று என் புருஷன் தேர்தல்ல நிற்க கூடாதுனு நீயும் பாண்டியம்மாவும் செய்த வேலையாக தான் இருக்கும் என்பது எனக்கு நல்லாவே தெரியும்.

இன்னும் 1 மணி நேரத்தில் என் புருஷனை வெளியே கொண்டு வரேன், உன் புள்ளையை காக்கி சட்டையை கழட்ட வைத்து உட்கார வைக்கிறேன், என் புருஷனை தேர்தலில் நிற்க வைத்து உன்னை தோற்கடித்து உன் திருட்டு வேலையை எல்லாத்தையும் வெளியே கொண்டு வரேன் என்று சவால் விடுகிறாள். அதன் பிறகு நேராக தண்ணீர் டேங்க் அருகே வந்து ஏதாவது ஆதாரம் கிடைக்குமா என்று தேடி பார்க்க எதுவும் கிடைக்காத நிலையில் திடீரென அவளது கண்ணில் சிசிடிவி கேமரா ஒன்று தென்படுகிறது.

இதனால் பரணி சந்தோஷமடைகிறாள், உடன் இருந்த சிவபாலனிடம் உன் மாமாவை வெளியே கொண்டு வர ஆதாரம் கிடைத்து விட்டது என்று சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மிஸ் பண்ணாம பாருங்க.

Related Posts

Leave a Comment