கூட்டிட்டு போயிரு! சரணடைந்த கோபி.. தாய் பாசத்தை பார்த்து கலங்கி நின்ற பாக்கியா..

by Editor News

பிரபல தொலைக்காட்சியில் 1000 எபிசோடை கடந்து ஓடி கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.

இந்த சீரியலில் நடிக்கும் கதாபாத்திரங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவிட்டதால் இன்று வரை சுவாரஸ்யமாக சென்றுக் கொண்டிருக்கின்றது.

அந்த வகையில், தற்போது பாக்கியா – கோபியின் கதை முடிந்து ராதிகா – கோபியின் கதை ஆரம்பமாகியுள்ளது.

தோலுக்கு மேல் வளர்ந்த பிள்ளைகளை வைத்து கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ளும் முயற்சியில் கோபி இறங்கியுள்ளார். இதற்கு செழியன் மற்றும் எழில் இருவருமே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் ராதிகா, ஈஸ்வரி இருவரையுமே கோபி ராதிகா வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். ராதிகா – அம்மாவிற்கு ஈஸ்வரி வீட்டிற்குள் வருவது பிடிக்கவில்லை. இதனால் ஈஸ்வரிக்கு பிடிக்காத வேலைகளை தொடர்ந்து பார்த்து வருகிறார்.

ராதிகா அம்மா – ஈஸ்வரி சண்டை வீட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. வார்க்கிங் செல்லும் போது கோபி- பாக்கியாவிடம் ஈஸ்வரியை வீட்டிற்குள் கூட்டிட்டு போகமாறு கூறுகிறார்.

பாக்கியா “முடியாது” என கூறி விட்டு செல்கிறார். கோயிலில் மாமியாரை பார்த்து அவருக்கு சாப்பாடு கொடுத்து வீட்டிற்கு வரும்படி அழைக்கிறார்.

கோபியின் மனநிலை தெரியாமல்,“ கோபிக்கு தெரிந்தால் கஷ்டப்படுவான்.” என ஈஸ்வரி வீட்டிற்கு வர மறுக்கிறார். இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

Related Posts

Leave a Comment