ராதிகா வீட்டில் வெடித்த பூகம்பம்.. ஈஸ்வரி எடுத்த அதிரடி முடிவு..

by Editor News

பிரபல தொலைக்காட்சியில் 1000 எபிசோடை கடந்து ஓடி கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.

இந்த சீரியலில் நடிக்கும் கதாபாத்திரங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவிட்டதால் இன்று வரை சுவாரஸ்யமாக சென்றுக் கொண்டிருக்கின்றது.

அந்த வகையில், தற்போது பாக்கியா – கோபியின் கதை முடிந்து ராதிகா – கோபியின் கதை ஆரம்பமாகியுள்ளது.

தோலுக்கு மேல் வளர்ந்த பிள்ளைகளை வைத்து கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ளும் முயற்சியில் கோபி இறங்கியுள்ளார். இதற்கு செழியன் மற்றும் எழில் இருவருமே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் ராதிகா, ஈஸ்வரி இருவரையுமே கோபி ராதிகா வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். ராதிகா – அம்மாவிற்கு ஈஸ்வரி வீட்டிற்குள் வருவது பிடிக்கவில்லை. இதனால் ஈஸ்வரிக்கு பிடிக்காத வேலைகளை தொடர்ந்து பார்த்து வருகிறார்.

ராதிகா அம்மா – ஈஸ்வரி சண்டை வீட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

ஈஸ்வரியின் குணத்தை புரிந்து கொண்ட ராதிகா, கமலா இருவரும் அவரை எந்நேரமும் ஏதாவது சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். இதனால் கடுப்பான ஈஸ்வரி, கோபிக்கு கோல் செய்துள்ளார்.

வீட்டிற்கு வந்து ஈஸ்வரியினால் கோபமடைந்த கோபி கண்டப்படி ஈஸ்வரியை திட்டுகிறார். கோபியும் இப்படி ஏமாற்றி விட்டதால் ஈஸ்வரி முதியோர் இல்லத்திற்கு செல்லப்போவதாக கூறிச் செல்கிறார்.

இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ காட்சிகள் வெளியாகியுள்ளது.

Related Posts

Leave a Comment