அதிரடியாக கைது செய்யப்பட்ட குணசேகரன் அதிர்ச்சி கொடுத்த கதிர்..

by Editor News

திருச்செல்வம் அவர்களின் இயக்கத்தில் சன் டிவி தொலைக்காட்சியிவ் நாளுக்கு நாள் அதிரடி திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வந்த தொடர் எதிர்நீச்சல்.

குணசேகரன் என்ற ஆணாதிக்கம் கொண்ட பெண்களை அடக்கியாள நினைக்கும் மோசமான எண்ணம் கொண்டவரிடம் இருந்து அவரது குடும்பத்து பெண்கள் எப்படி வெளியே வந்து தங்களது சொந்த காலில் நிற்கிறார்கள் என்பதை காட்டும் வகையில் தொடர் பயணித்தது.

இந்த நிலையில் தான் எதிர்நீச்சல் தொடர் ஜுன் அல்லது ஜுலை மாதத்தில் கிளைமேக்ஸ் காட்சிகள் வர இருக்கிறது என்ற ஷாக்கிங் செய்தி வந்தது.

தற்போது சமூக வலைதளத்தில் எதிர்நீச்சல் தொடரின் இன்றைய எபிசோட் புரொமோ வந்துள்ளது.

அதில் கிள்ளி வளவன் வாக்குமூலம் கொடுத்துள்ளதாகவும் தர்ஷினி கடத்தல் வழக்கில் சம்பந்தம் இருப்பதால் கைது செய்வதாகவும் குணசேகரனை போலீசார் கைது செய்கிறார்கள்.

அவரது தாய் நானே சென்று என் மகனை வெளியே கொண்டு வரேன் என்று கூற கதிர் யாரும் செல்ல வேண்டாம் என கூறி அவர் கிளம்புகிறார். இதைக்கேட்டு நந்தினி ஷாக் ஆகிறார்.

Related Posts

Leave a Comment