தர்மகத்தா தேர்தலில் அன்னபோஸ்டாக ஜெயிக்க ஆசைப்பட்ட செளந்தரபாண்டி; ஊர் மக்கள் வைத்த செம ட்விஸ்ட்

by Editor News

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பரணி பானிபூரி கேட்க வெட்டுகிளினியின் ஐடியாவை கேட்டு ஷண்முகம் சோலா பூரியையும் பாணியையும் தனித்தனியாக வாங்கி வந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, ஷண்முகம் அந்த பூரியையும் ரசத்தையும் ஒரு தட்டில் வைத்து மூடி எடுத்து வந்து, உனக்காக ஸ்பெஷலாக வாங்கிட்டு வந்தேன் என்று சொல்லி கொடுக்க, அதை திறந்து பார்த்த பரணி இது தான் உங்கள் ஊர்ல பானிபூரியா என்று முகத்தில் தூக்கி வீசுகிறாள்.

ஷண்முகம் திட்டு வாங்கியதும் ஐடியா கொடுத்த வெட்டுக்கிளி அங்கிருந்து எஸ்கேப் ஆகிறான். இதனையடுத்து ஊர் பெரியவர்கள் சௌந்தரபாண்டியை சந்தித்து இந்த முறை தர்மகத்தா தேர்தலில் நீங்க அன்னபோஸ்ட்டாக ஜெயிக்க முடியாது, உங்களை எதிர்த்து ஷண்முகம் நிற்க போறாரு, அதனால் தேர்தல் நடக்கும். அதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று சொல்லி விட்டு செல்கிறார்கள். இதனால் சௌந்தரபாண்டி பயங்கர அதிர்ச்சி அடைகிறார்.

அடுத்து ஷண்முகம் பரணிக்காக தேடி பிடித்து ஒரு பானிபூரி காரனை வண்டியோடு வீட்டிற்கு அழைத்து வந்து எல்லாரையும் வெளியே கூப்பிட தங்கைகளும் வைகுண்டமும் மட்டும் வருகிறார்கள். உங்களுக்காக தான் பானிபூரி வண்டியை கூப்பிட்டு வந்தேன் என்று சொல்ல இவர்கள் எல்லாரும் பனிபூரியை ரசித்து ரசித்து சாப்பிட ஷண்முகம் என்னப்பா நீ மட்டும் சாப்பிட்டுட்டு இருக்க என்று கேட்க வைகுண்டம் அதுக்கு தான டா கூட்டிட்டு வந்த என்று திருப்பி கேட்க பரணியையும் கூப்பிடு என்று சொல்ல வைகுண்டம் ஆமாம் மருமகளை மறந்திட்டோமே நீயே கூப்பிடு என்று சொல்ல ஷண்முகம் பரணியை கூப்பிட அவளும் வெளியே வருகிறாள்.

வெளியே வந்த பரணியிடம் தங்கைகள் அண்ணன் எங்களுக்காக தான் பானிபூரி வண்டியை கூட்டிட்டு வந்திருக்கு வாங்க நீங்களும் சாப்பிடுங்க என்று சொல்ல பரணி எனக்கு வேண்டாம், எனக்கு பானிபூரி பிடிக்காது என்று சொல்ல ஷண்முகம் என்ன நீ பிடிக்காதுன்னு சொல்ற, காலையில் நீ தானே கேட்ட என்று உண்மையை உளற தங்கைகள் அப்போ எங்களுக்குனு சொன்னது பொய்யா என்று கோபப்படுகின்றனர். பிறகு எல்லாரும் ஒன்று சேர்ந்து பானிபூரியை சாப்பிட மறுபக்கம் சௌந்தரபாண்டி ஒற்றை காலில் பூஜை செய்கிறார். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.

Related Posts

Leave a Comment