ரோகினியின் மகனை வீட்டிற்கு அழைத்து வந்த முத்து!

by Editor News

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் மக்களின் பேராதரவை பெற்று எப்பொழுதும் டிஆர்பியில் உச்சத்தில் இருப்பது தான் சிறகடிக்க ஆசை சீரியல்.

முத்து, மீனா ஆகிய இருவரின் வாழ்க்கையில் நடக்கும் எதார்த்த குடும்ப கதையாகும். இரண்டு மகன்கள் மீது பாசமாக இருக்கும் தாய்க்கு முத்துவை மட்டும் பிடிக்காமல் போயுள்ளது.

இதற்கான காரணத்தை சீரியல் தரப்பினர் சீக்ரெட்டாகவே வைத்துள்ளனர். மற்றொரு புறம் பூக்கடை நடத்திவரும் குடும்பம் தான் மீனாவின் குடும்பம்.

முத்துவிற்கும், மீனாவிற்கும் திருமணம் நடைபெற்ற நிலையில், இவர்கள் வாழ்க்கையில் சந்திக்கும் நிகழ்வுகளை வெளியிட்டு வருகின்றனர்.

அம்மாவிற்கு பிடிக்காத பிள்ளையாக இருக்கும் முத்துவை அப்பாவிற்கு அதிகமாகவே பிடிக்கும். சமீபத்தில் சில சிக்கல்களை சந்தித்து வந்த முத்துவை மீனா தனது சாமர்த்தியத்தால் தலைநிமிர வைத்துள்ளார்.

மனோஜின் மனைவி ஏற்கனவே திருமணமானவர் என்பதை அனைவரிடமும் மறைத்து வந்த நிலையில், தற்போது அவரது மகனை முத்து வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

ரோகினி தனது தாய் என்று கூறாமல், பயங்கர மோசமான குணத்தை கொண்டுள்ளார். ஆனால் மீனா முத்து இருவரும் கிரிஷ் மீதும், அவரது பாட்டி மீதும் அதிக பாசம் வைத்துள்ளனர்.

கிரிஷின் வருகையால் ரோகினியின் நிலை என்னவாக மாறப்போகின்றது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Related Posts

Leave a Comment