பஞ்சாயத்தில் பல்பு வாங்கிய சௌந்தரபாண்டி.. டபுள் மடங்காக திருப்பி அடித்த பரணி..

by Editor News

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பஞ்சாயத்தில் பரணி நீங்க இருக்கிற வீடு என் பேர்ல இருக்கு என்று டாகுமென்ட்டை எடுத்து காட்டி அதிர்ச்சி கொடுத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, சௌந்தரபாண்டி அது என் பொண்டாட்டி பாக்கியம் பேர்ல தானே இருந்துச்சு என்று பாக்கியம் பக்கம் திரும்ப என் பொண்ணுக்கு நீங்க என்ன பண்ணீங்க? அதனால் வீட்டை அவ பேருக்கு எழுதி கொடுத்துட்டேன் என்று சொல்ல அதை கேட்டு ஷாக் ஆகுகின்றனர். பிறகு சௌந்தரபாண்டி நான் சாவியை கொடுத்துறேன், தோல்வியை ஏத்துக்குறேன் என்று சொல்லி பஞ்சாயத்தில் சரண்டர் ஆகிறார்.

பரணியிடம் வீட்டு சாவியை கேட்க அவள் என் வீட்டில இருந்து தூக்கி வெளியே போட்ட பொருளை எல்லாம் திரும்ப வீட்டுக்குள்ள எடுத்து வச்சா தான் சாவி என்று சொல்ல சௌந்தரபாண்டி சனியனை அனுப்பி எடுத்து வைக்க சொல்ல பரணி தூக்கி போட்டவங்க தான் எடுத்து வைக்கணும் என்று சௌந்தரபாண்டி மறறும் முத்துபாண்டியை வைத்து பொருட்களை எடுத்து உள்ளே எடுத்து வைக்கிறாள்.

இதனை தொடர்ந்து வீட்டிற்கு வந்த சௌந்தரபாண்டி யாரை கேட்டு வீட்டை அவ பேருக்கு எழுதி வச்ச என்று அடிக்க பாய முத்துப்பாண்டி வேண்டாம் பா ஏதாவது பிரச்சனையாக போகுது என்று தடுத்து நிறுத்துகிறான்.

பாக்கியம் என் பொண்ணுக்கு என்ன பண்ணீங்க? என்று கேட்க முத்துப்பாண்டி அதான் அவ்வளவு செலவு பண்ணி டாக்டருக்கு படிக்க வச்சோமே அப்புறம் என்ன என்று கேட்க கல்யாணத்துக்கு என்ன பண்ணீங்க என்று கேட்கிறாள். மேலும் ஒண்ணுமே பண்ணல, அப்பாவோட சொத்துல பொண்ணுக்கும் சரி பாதி பங்கு இருக்கு.. ஆனால் நீங்க என்ன பண்ணீங்க? நான் கேஸ் போடவா என்று ஷாக் கொடுக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க

Related Posts

Leave a Comment