மீனாவை வெளியே துரத்திய மாமியார்! முத்து எடுத்த அதிரடி முடிவு..

by Editor News

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் மக்களின் பேராதரவை பெற்று எப்பொழுதும் டிஆர்பியில் உச்சத்தில் இருப்பது தான் சிறகடிக்க ஆசை சீரியல்.

முத்து, மீனா ஆகிய இருவரின் வாழ்க்கையில் நடக்கும் எதார்த்த குடும்ப கதையாகும். இரண்டு மகன்கள் மீது பாசமாக இருக்கும் தாய்க்கு முத்துவை மட்டும் பிடிக்காமல் போயுள்ளது.

இதற்கான காரணத்தை சீரியல் தரப்பினர் சீக்ரெட்டாகவே வைத்துள்ளனர். மற்றொரு புறம் பூக்கடை நடத்திவரும் குடும்பம் தான் மீனாவின் குடும்பம்.

முத்துவிற்கும், மீனாவிற்கும் திருமணம் நடைபெற்ற நிலையில், இவர்கள் வாழ்க்கையில் சந்திக்கும் நிகழ்வுகளை வெளியிட்டு வருகின்றனர்.

அம்மாவிற்கு பிடிக்காத பிள்ளையாக இருக்கும் முத்துவை அப்பாவிற்கு அதிகமாகவே பிடிக்கும். சமீபத்தில் சில சிக்கல்களை சந்தித்து வந்த முத்துவை மீனா தனது சாமர்த்தியத்தால் தலைநிமிர வைத்துள்ளார்.

மனோஜ் ஜீவாவிடம் இருந்து பெறப்பட்ட பணத்தை வைத்து புதிய தொழில் ஆரம்பித்துள்ளார். இதனால் விஜயா முத்து மற்றும் மீனாவை மோசமாக நடத்துகின்றார்.

ஒரு கட்டத்தில் எல்லை மீறி கொடுமைப்படுத்த ஆரம்பித்துள்ள விஜயாவிற்கு தக்க பதிலடி முத்து கொடுத்துள்ளார். அதாவது மீனா இனிமேல் வீட்டில் சமைக்க மாட்டார் என்றும் இனி அவரவர்களுக்கு தேவையானதை அவரவர்கள் செய்து கொள்ள முத்து முடிவெடுத்துள்ளார்.

முத்து எடுத்துள்ள இந்த முடிவால் விஜயா கடும் அதிர்ச்சியில் காணப்படுகின்றார். அடுத்து குறித்த சீரியலில் என்ன நடக்கவிருக்கின்றது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Related Posts

Leave a Comment