ஷண்முகம் வீட்டை அடித்து நொறுக்கிய செளந்தரபாண்டி.. முத்துப்பாண்டி வேலைக்கு வேட்டு வைக்கும் பரணி

by Editor News

மிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சௌந்தரபாண்டி ஷண்முகம் வீட்டு டாகுமெண்ட்டுடன் கிளம்பி வந்த நிலையில் இன்றும் நாளையும் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது வீட்டிற்குள் நுழைந்த சௌந்தரபாண்டி இது என்னுடைய வீடு எல்லாரும் வெளியே போங்க என்று சொல்ல, சண்முகத்தின் தங்கைகள் என் அண்ணா இல்லாத போது வீட்டிற்குள் வராதீங்க என்று சொல்ல, அதையும் கேட்காமல் அத்துமீறி வீட்டிற்குள் நுழைகின்றனர்.

அடுத்து முத்துபாண்டியும் சௌந்திரபாண்டியும் வைகுண்டத்தை அடித்து போட்டு விட்டு பொருட்களை தூக்கி வெளியே வீசி விட்டு அராஜகம் செய்து விட்டு செல்ல, வைகுண்டம் கிளினிக்கிற்கு ஓடி வந்து ஷண்முகம் மற்றும் பரணியுடம் நடந்த விஷயத்தை சொல்கின்றனர், உடனே கோபமாகும் ஷண்முகம் வட்டிக்கு பணம் கொடுத்தவனை தேடி போய் சட்டையை பிடித்து அடிக்க, அவன் நீங்க பணத்தை திருப்பி தருவீங்களா? இல்லையானு? சந்தேகமா இருந்தது. அப்போ சௌந்தரபாண்டி தான் பணத்தை உங்களுக்கு தர சொல்லி அந்த பத்திரத்தை வாங்கிட்டாரு என்ற உண்மையை உடைக்கிறார்.

இதனால் ஆவேசமாகும் பரணி இந்த விஷயத்தை நான் பார்த்துக்கறேன் என்று ஷண்முகத்துடன் கோபத்துடன் தனது அப்பாவை பார்க்க கிளம்பி வருகிறாள். வரும் போது பாக்கியத்திற்கு போன் செய்து இன்னைக்கு உன் புருஷனை சும்மா விட மாட்டேன் என்று நடந்ததை சொல்லி ஆவேசப்படுகிறாள். பாக்கியம் ஏதோ ஒரு ஐடியாவை சொல்ல பரணி நான் பார்த்துக்கறேன் என்று போனை வைக்கிறாள். சௌந்தரபாண்டி வீட்டிற்கு வந்தவள் பாண்டியம்மாவை கழுத்தை பிடித்து இழுத்து வந்து வெளியே தள்ளி வீட்டிற்கு பூட்டு போடுகிறாள்.

என்னை மீறி வீட்டை திறந்து உள்ள போனீங்கன்னா உங்களை சும்மா விட மாட்டேன், முத்துப்பாண்டி அத்துமீறி வீட்டுக்குள் புகுந்து வீட்டை காலி பண்ண சொன்னதை வீடியோ எடுத்து வச்சிருக்கோம், அதை SP-க்கு அனுப்பி வேலையை பிடிங்குகிடுவேன் என்று வார்னிங் கொடுத்து வருகிறாள்.

சௌந்தரபாண்டி வீட்டிற்கு வந்ததும் அவ பூட்டு போட்டா உள்ள வர கூடாதா என்ன என்று கோபப்பட்டு பூட்டை உடைக்க போக சிவபாலன் பரணி கொடுத்த வார்னிங்கை சொல்ல முத்துப்பாண்டி வேண்டாம் பா, உனக்கு இந்த ஊர்ல செல்வாக்கு இருக்கு. எனக்கு இந்த வேலை போனால் மரியாதை இருக்காது. இதை வேற விதமாக பார்த்துக்கலாம் என்று அப்பாவை தடுத்து நிறுத்துகிறான், இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.

Related Posts

Leave a Comment