சற்று உயர்ந்தது தங்கம் விலை..

by Editor News

தங்கத்தின் விலையானது இந்த மாதம் தொடக்க முதலே உயர்ந்து வந்தது. கடந்த அக்ஷய திருதியை முன்னிட்டு தங்கம் விலை ஒரே நாளில் மூன்று முறை அதிகரித்தது. இதையடுத்து கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலை குறைந்து காணப்பட்டது. நேற்றைய நிலவரப்படி தங்கத்தின் விலையானது ரூ. 800 குறைந்தது.

இந்நிலையில் சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 40 உயர்ந்துள்ளது . இதன் மூலம் ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 53 ஆயிரத்து 240 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதே போல் ஒரு கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 6665 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து 96 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது .ஒரு கிலோ வெள்ளியின் விலை 96 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது. இருப்பினும் மிகப்பெரிய அளவில் தங்கம் விலை ஏற்றத்தை சந்திக்காத நிலையில் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Posts

Leave a Comment