கார்த்திக் தீபாவின் வெட்டிங் டே பங்ஷனுக்கு ரம்யா வருகையால் புது புயல் கிளம்புமா?

by Editor News

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தீபாவும் ரம்யாவும் போட்டி போட்டு கொண்டு கிப்ட் வாங்கிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது அபிராமி வீட்டில் கல்யாண நாள் கொண்டாடத்திற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நடந்து கேக்குடன் தயார் நிலையில் இருக்கின்றனர்.

மறுபக்கம் பங்க்ஷன் கிளம்பிய ரம்யா அப்பாவையும் பங்க்ஷனுக்கு கூப்பிட, அவர் எனக்கு உடம்பு முடியல நீ மட்டும் போயிட்டு வா மா என்று சொல்கிறார். எப்படியாவது ரம்யா கார்த்திக் தீபா கல்யாண நாள் கொண்டாட்டத்திற்கு வருவதை தடுக்க வேண்டும் என்று யோசிக்கிறாள். இதற்காக பிளான் போட்டு ஒரு ஆளை ஏற்பாடு செய்து ரம்யா கிளம்ப உள்ள காரை ரிப்பேர் செய்து விட கார் ஸ்டார்ட் ஆகாமல் போய் விடுகிறது.

இதனையடுத்து ரம்யா கேப் புக் செய்து தீபா வீட்டிற்கு வந்து கொண்டிருக்க இங்க தீபா ரம்யா வருவதா சொன்னா அதுவரைக்கும் காத்திருக்கலாம் என்று சொல்லி அனைவரும் வெயிட் செய்து கொண்டிருக்கின்றனர். ஐஸ்வர்யாவின் முதல் அட்டெம்ப்ட் தோல்வி அடைந்ததும் அடுத்து அவளே கார் எடுத்து வந்து ரம்யா வரும் கேப் முன்னாடி நிறுத்தி வம்பிழுத்து ரம்யாவின் நேரத்தை வீணடிக்கிறார்.

மறுபக்கம் அபிராமி வீட்டில் எல்லாரும் ரம்யா வருகைக்காக காத்திருக்க, தீபா அவளுக்கு போன் செய்ய ரம்யா போனை கவனிக்காமல் இருக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மிஸ் பண்ணாம பாருங்க.

Related Posts

Leave a Comment