குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி..

by Editor News

ஒரு வார கால தடைக்கு பிறகு, குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தொடர் கனமழையின் காரணமாக குற்றாலம் பகுதியில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட ஐந்து முக்கிய அறிவிப்புகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது. இதன் காரணமாக குற்றால அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கான தடை கடந்த ஏழு நாட்களாக நீடிக்கப்பட்டது.

இந்நிலையில் குற்றால அருவிகளில் குளிக்க மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பழைய குற்றால அருவி பகுதியில் பாதுகாப்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. தடை நீக்கப்பட்ட நிலையில் பழைய குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளியல் போட்டு வருகின்றனர். கடந்த 17ஆம் தேதி திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக குற்றால அருவிகளில் தடை விதிக்கப்பட்டது.

Related Posts

Leave a Comment