நகைகளை நைஸாக அபேஸ் பண்ண பார்க்கும் சௌந்தரபாண்டி.. இசக்கி வைத்த செம்ம ட்விஸ்ட்

by Editor News

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பரணிக்கு நகை பற்றிய உண்மை தெரிந்து விட்டதால் சௌந்தரபாண்டி தூக்கம் வராமல் தவித்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, சௌந்தரபாண்டி ரூமுக்கு சென்று தூங்கி கொண்டிருக்கும் பாக்கியத்தை தட்டி தண்ணீர் கேட்கிறார்.

அவள் திட்ட, சௌந்தரபாண்டி என்னடி என்னை திட்டுற என்று கேட்க தூக்கத்தில் எழுப்பினா அப்படி தான் பேசுவேன் என்று சொல்ல, சௌந்தரபாண்டி முத்துப்பாண்டி ரூமுக்கு செல்கிறார். மறுபக்கம் பரணி தூக்கத்தில் இருந்து எழுந்து சண்முகத்தை எழுப்பி என் அப்பா கண்டிப்பா அந்த நகைகளை இடம் மாத்துவாரு, அதுக்கு நாம விட கூடாது, அவரை லாக் பண்ணனும் என்று சொல்ல, அந்த ரகசிய ரூம் பத்தி எனக்கு தெரியும் இப்போவே போலாமா என்று கேட்க, ஷண்முகம் இப்போ வேணா காலையில் போகலாம் என்று சொல்லி படுத்து தூங்க சொல்கிறான்.

இங்கே முத்துபாண்டியை எழுப்பிய சௌந்தரபாண்டி அந்த நகைகளை என்ன செய்வது என்று கேட்க, அவன் நாளைக்கே இடம் மாத்தி ஆகணும் என்று சொல்கிறான். இவர்கள் ஏதோ பேசுவதை இசக்கி கவனித்து விடுகிறாள். மறுநாள் பாண்டியம்மாவும் வீட்டிற்கு வருகிறாள், நீ உண்மையை சொன்னதும் பதறி போய் ஓடி வந்துட்டேன் என்று சொல்லி மூவரும் கூட்டு சேர்ந்து பேச, இசக்கி இதையும் பார்த்து விடுகிறாள்.

மறுநாள் பரணிக்கு போனை போட்டு இவங்க ஏதோ பிளான் பண்ணுறாங்க என்று சொல்ல, பரணி ஷண்முகத்திடம் விஷயத்தை சொல்கிறாள். அடுத்து பரணியும் ஷண்முகமும் கிளம்பி பைக்கில் வர, மறுபக்கம் இவர்கள் பெட்டியை இடம் மாற்ற தயாராகுகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மிஸ் பண்ணாம பாருங்க.

Related Posts

Leave a Comment