குடிபோதையில் எழில்… யாருக்கும் தெரியாமல் இந்துவின் சமாதிக்கு சென்ற குழந்தைகள்..

by Editor News

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கனகவல்லி சுடரிடம் நாளைக்கு இந்துவோட நினைவு நாள் என்று சொல்லி வருத்தப்பட்ட நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, மறுநாள் காலையில் சுடர் பாஸ்போர்ட் வெரிஃபிகேஷனுக்காக கிளம்புகிறாள். கனகவல்லியிடம் சாரி மா என்னால இன்னைக்கு இங்க இருக்க முடியல என்று சொல்லி வருத்தப்பட அவள் நீ என்னமா பண்ணுவ, நீ நினைக்கிறதெல்லாம் நல்லபடியா நடக்கட்டும் என்று ஆசிர்வாதம் செய்து அனுப்பி வைக்கிறாள். இதே நேரத்தில் ஹாலில் இந்துவின் போட்டோவிற்கு அலங்காரம் செய்து வைத்திருக்க சுடர் அதை பார்த்து விடுவாளோ என்ற பில்டப் எகிறுகிறது.

அடுத்து ரூமில் குழந்தைகள் நாலு பேரும் அம்மா இருந்து இருந்தா எவ்வளவு சந்தோசமாக இருந்திருக்கும், அம்மாவை பார்க்கணும் போலவே இருக்கு என்று பேசி கொள்ள கவின் அம்மாவை தான் பார்க்க முடியாது. ஆனால் அம்மா இருக்க இடத்துக்கு போக முடியும்ல என்று சொல்லி சமாதிக்கு போகலாம் என்று ஐடியா கொடுக்கிறான்.

வீட்ல யாருமே இல்லையே எப்படி போறது என்று எல்லாரும் கேள்வி கேட்க சமாதி இருக்க இடம் தான் நமக்கு தெரியுமே நாமளே போகலாம் என்று சொல்ல எல்லாரும் கீழே வர எழில் இந்துவை நினைத்து குடித்து கொண்டிருக்க கனகவல்லி பூஜையறையில் இருக்க குழந்தைகள் யாருக்கும் தெரியாமல் சமாதிக்கு கிளம்பி வருகின்றனர்.

சமாதிக்கு வந்த இவர்கள் அங்கே செடி எல்லாம் முளைத்து கிடப்பதை பார்த்து அதை சுத்தம் செய்ய தொடங்குகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன? என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

Related Posts

Leave a Comment