கோலாகலமாக கொண்டாடப்பட்ட முத்து, மீனா திருமண நாள்! வில்லனாக வந்த சத்யா

by Editor News

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் மக்களின் பேராதரவை பெற்று எப்பொழுதும் டிஆர்பியில் உச்சத்தில் இருப்பது தான் சிறகடிக்க ஆசை சீரியல்.

முத்து, மீனா ஆகிய இருவரின் வாழ்க்கையில் நடக்கும் எதார்த்த குடும்ப கதையாகும். இரண்டு மகன்கள் மீது பாசமாக இருக்கும் தாய்க்கு முத்துவை மட்டும் பிடிக்காமல் போயுள்ளது.

இதற்கான காரணத்தை சீரியல் தரப்பினர் சீக்ரெட்டாகவே வைத்துள்ளனர். மற்றொரு புறம் பூக்கடை நடத்திவரும் குடும்பம் தான் மீனாவின் குடும்பம்.

முத்துவிற்கும், மீனாவிற்கும் திருமணம் நடைபெற்ற நிலையில், இவர்கள் வாழ்க்கையில் சந்திக்கும் நிகழ்வுகளை வெளியிட்டு வருகின்றனர்.

அம்மாவிற்கு பிடிக்காத பிள்ளையாக இருக்கும் முத்துவை அப்பாவிற்கு அதிகமாகவே பிடிக்கும். சமீபத்தில் மீனாவின் தம்பி சத்யா, முத்துவின் தம்பி மனைவி சுருதியின் தந்தை செய்த சதியால் பிரச்சினையில் சிக்கி, அதிலிருந்து மீனா மீட்டு வந்தார்.

இந்நிலையில் மனோஜ் ஜீவாவிடம் இருந்து பெறப்பட்ட பணத்தை வைத்து புதிய தொழில் ஆரம்பிக்கின்றார்.

இந்நிலையில் முத்துவின் முதல் திருமண நாள் வந்துள்ள நிலையில், அதனை கோலாகலமாக கொண்டாடியுள்ளனர். சிறையிலிருந்து வெளியே வந்த சிட்டி சத்யாவிடம் பணத்தை கொடுத்துவிட்டு வீட்டில் கலகம் வருவதற்கு ஏற்பாடு செய்துள்ளார்.

Related Posts

Leave a Comment