ரம்யாவால் வந்த மோதல்.. கார்த்திக்கு தீபா கொடுத்த கடைசி வார்னிங்..

by Editor News

தமிழ் சின்னத்திரையில் தினந்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் ரம்யாவை கூட்டிக்கொண்டு பைக்கில் டெண்டர் எடுக்கும் இடத்திற்கு சென்ற நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. ரம்யா மற்றும் கார்த்திக் ஜோடியாக பைக்கில் செல்வதை பார்த்த ஒரு பெண்மணி தீபாவுக்கு தகவல் கொடுக்க, தீபா அதிர்ச்சியும் கோபமும் அடைகிறாள்.

அடுத்ததாக கார்த்திக், ரம்யா ஆகியோர் டெண்டர் எடுக்கும் இடத்திற்கு வர, ஆனந்த் டெண்டர் நமக்குத்தான் கிடைக்கும் என்று ஆவலோடு இருக்க அது ரம்யா கைக்கு செல்கிறது. இதனால் ஆனந்த் குழப்பம் அடைய, ஃபிளாஷ் கட்டில் பி ஏ ஆனந்திடம் பேசிய விஷயத்தை கேட்டு ரம்யாவிடம் சென்று அமௌன்ட்டை மாற்றியது தெரிய வருகிறது.

அடுத்ததாக ஆனந்த் என்ன கார்த்தி புது கம்பெனிக்கு விசுவாசமா வேலை செய்ற போல என்று கேள்வி கேட்க, ஆமா நான் வேலை செய்கிற கம்பெனிக்கு விசுவாசமா இருக்கேன். நேர்மையா வேலை செய். இப்படி குறுக்கு வழியில முன்னேறினா அது நிலைக்காது என்று அறிவுரை சொல்கிறான்.

அதன் பிறகு கார்த்திக் வீட்டுக்கு வர தீபா நீங்க ஒரு பொண்ணு கூட பைக்ல போனீங்களா என்று கேட்க, அவனும் ஆமாம் என்று சொல்ல, தீபா கோபப்படுகிறாள். கார்த்திக் என்னோட பாஸ் தான் கூட்டிட்டு போனேன், கார் ரிப்பேர் ஆயிடுச்சு. முக்கியமா போக வேண்டிய டெண்டர் மீட்டிங். அதனால் பைக்கில் கூட்டிட்டு போனேன் என்று சொல்கிறான்.

இதைக் கேட்ட தீபா இதெல்லாம் சரிதான், ஆனால் இனி யாரையும் நீங்க பைக்ல கூட்டிட்டு போகக்கூடாது. உங்க கூட பைக்ல உட்காரும் உரிமை எனக்கு மட்டும்தான் இருக்கு என்று கண்டிஷன் போட, கார்த்திக்கு அதற்கு சம்மதம் தெரிவித்து பிரச்சனையை தீர்க்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.

Related Posts

Leave a Comment