ஜெயிலில் சூடாமணியை சந்தித்த பரணி… பிளாஷ்பேக்கால் உடையும் உண்மை…

by Editor News

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஷண்முகத்தை ரவுடிகள் கொல்ல வர, முருகன் வேடத்தில் வந்தவர்களால் அவனது உயிர் காப்பாற்றப்பட்ட நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது ஷண்முகம் பரணியை ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து தன்னுடைய அம்மா சூடாமணியை காட்ட அத்தையை பார்த்ததும் பரணி அவளை கட்டியணைத்து கண்ணீர் விடுகிறாள். அதன் பிறகு நீங்க ஏன் ஜெயிலுக்கு வந்தீங்க என்று கேட்க, சூடாமணி பிளாஷ்பேக் கதையை சொல்ல தயாராகிறாள். இதனை தொடர்ந்து பிளாஷ்பேக் ஓபன் ஆகிறது.

சூடாமணி முருகன் கோவில் வாசலில் பூ கடை வைத்து பிழப்பை நடத்தி வருகிறார். இந்த நேரத்தில் முதல் முறையாக வைகுண்டம் கோவில் தர்மகத்தாவாக பதவி ஏற்கிறார். அந்த சமயத்தில் முருகனுக்காக ஒருவர் வைர நகைகளை கொண்டு வந்து அன்பளிப்பாக கொடுக்கிறார். சௌந்தரபாண்டி இந்த வைர நகைகளை தனக்கு சொந்தமாக்கி கொள்ள முடிவெடுக்கிறார்.

திருடனை வைத்து நகைகளை திருடி விட்டு, அதற்கு மாற்றாக போலி நகைகளை வைத்து சமாளித்து விடலாம் என்று கணக்கு போடுகிறார். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மிஸ் பண்ணாம பாருங்கள்.

Related Posts

Leave a Comment