சபரிமலை கோயில் நடை இன்று மாலை திறப்பு!

by Editor News

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டு தோறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடை பெறும். இதுதவிர ஒவ்வொரு மாதத்தின் முதல் 5 நாட்களிலும், விஷு, ஓணம் பண்டிகை, பங்குனி உத்திரம் திருவிழா நாட்களிலும் நடை திறக்கப்பட்டு பூஜைகள் செய்யப்படும்.

இந்நிலையில் வைகாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை சி கோயில் நடை இன்று (மே14) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. இன்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது என சபரிமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது. நாளை காலை 5 மணிக்கு கணபதி ஹோமம் உள்ளிட்ட வழக்கமான பூஜைகளுடன் சிறப்பு பூஜை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment