‘இன்ஸ்டன்ட் அடை தோசை’..

by Editor News

தேவையான பொருட்கள்:

ரவை – 1 கப்
கடலை மாவு – 1 கப்
தயிர் – 1 கப்
கடுகு – 1 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 ஸ்பூன் பெருங்காயத் தூள் – சிறிதளவு
பச்சை மிளகாய் – 1(நறுக்கியது)
இஞ்சி – 1 துண்டு (நறுக்கியது) வெங்காயம் – 1 (நறுக்கியது)
கேரட் – 1 (துருவியது)
தண்ணீர், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

இன்ஸ்டன்ட் அடை தோசை செய்ய முதலில் ஒரு பாத்திரத்தில் ரவை, கடலை மாவு, தயிர், தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கட்டிகள் இன்றி நன்கு கலக்கி, பின் 20 நிமிடம் மூடி வைத்து விடுங்கள். இதனை அடுத்து ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடானதும் அதில் கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளிக்க வேண்டும். பிறகு அதில் பெருங்காயத் தூள், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்குங்கள். பின் அதில் துருவிய கேரட் சேர்த்து 5 நிமிடம் நன்கு கிளறி பிறகு இறக்கி விடுங்கள். இப்பொழுது இதை தயாரித்து வைத்துள்ள மாவுடன் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்குங்கள். அவ்வளவுதான் இப்போது இன்ஸ்டன்ட் அடை தோசைக்கான மாவு தயார்.

தோசை சுட அடுப்பில் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் கொஞ்சம் எண்ணெய் விட்டு சூடானதும், அதன் மேல் அடை தோசை மாவை வட்ட வடிவில் ஊற்றி மூடி வைத்து, பிறகு 4-5 நிமிடம் கழித்து தோசையை திருப்பிப் போட்டு பொன்னிறமாகும் வரை வேக வைத்து எடுங்கள். இப்போது சுவையான அடை தோசை ரெடி!! இதனுடன் நீங்கள் தேங்காய் சட்னி, சாம்பார் வைத்து சாப்பிட்டால் சுவை அட்டகாசமாக இருக்கும்.

Related Posts

Leave a Comment