செம்பு பாத்திரம் – மண் பானை ரெண்டுல எதுல தண்ணி குடிக்கிறது அதிக நன்மையை தரும்!

by Editor News

கொலஸ்டிரைால் குறையும்

அமெரிக்கன் கேன்சர் சொசைட்டி அறிக்கையின் படி, செம்பு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து குடிக்கும் போது உடலில் உள்ள கெட்ட கொலஸ்டிரால் குறைவது கண்டறியப்பட்டுள்ளது.

குறிப்பாக உடலுக்குத் தீங்கு செய்யக்கூடிய டிரை கிளிசரைடுகளை குறைத்து இதய நோய் ஆபத்துக்களைத் தடுக்கும் என்று கூறப்படுகிறது. புற்றுநோய் ஆபத்தை தடுக்கும்.

​ரத்தசோகை நீங்க

செம்பு பாத்திரத்தில் தண்ணீர் வைத்துக் குடிக்கும்போது உடலின் செயல்திறன் மேம்படும். குறிப்பாக, நாம் உண்ணும் உணவுகளில் உள்ள இரும்புச்சத்தை உடல் முழுமையாக உறிஞ்சிக் கொள்ள உதவும்.

உணவை உடைத்து அதில் உள்ள இரும்புச்சத்து முழுமையாகக் கிடைக்கச் செய்வதால் ஹீமோகுளோபின் ரத்தத்தில் அதிகரிக்கும். இதனால் அனீமியா என்னும் ரத்த சோகை பிரச்சினை வராமல் தடுக்க முடியும்.

இதய ஆரோக்கியம் மேம்பட

இதய ஆரோக்கியம் தான் நம் உடல் நலத்தின் மையமாகச் செயல்படுகிறது. அதை சீராக வைத்துக் கொள்ள உதவி செய்யும்.

செம்பு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து குடிக்கும்போது போதிய காப்பர் சத்து கிடைப்பதோடு ஜீரண மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும். ஜீரண ஆற்றல் அதிகரிக்கும். அது இதய ஆரோக்கியத்தையும் சேர்த்து அதிகரிக்கும்.

எடையை குறைக்கும்

காப்பர் பாத்திரத்தில் தண்ணீர் வைத்துக் குடிக்கும் போது அது உடலில் கொழுப்புகள் தேங்காமல் உடைத்து கழிவுகளாக வெளியேற்றி டீடாக்ஸ் செய்ய உதவி செய்யும்.

குறிப்பாக டிரை கிளிசரைடுகளும் கெட்ட கொலஸ்டிராலான எல்டிஎல் கொலஸ்டிராலும் சேருவதை தடுப்பதால் உடல் எடை குறையும். உடல் பருமன் பிரச்சினை ஏற்படாமல் தடுக்கலாம்.

​உடல் குளிர்ச்சியாக

செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிக்கும்போது உடலில் உள்ள அதிகப்படியான ரசாயனங்கள் மற்றும் கழிவுகளை வெளியேற்றும்.

அதோடு உடல் சூட்டைத் தணிக்கும் தன்மையும் உண்டு. குறிப்பாக வெயில் காலத்தில் உடலைக் குளிர்ச்சியாக வைத்திருக்க இது உதவி செய்யும்.

உடல் வெப்பநிலை

மண் பானையில் தண்ணீர் வைத்துக் குடிப்பதன் முக்கிய நோக்கமே அது அந்த தண்ணீரை நன்கு குளிர்ச்சியாக மாற்றும் என்பதற்கு தான். தண்ணீரின் சுவையையும் கூட்டும்.

குறிப்பாக வெயில் காலத்தில் மண் பாத்திரங்களில் தண்ணீர் வைத்துக் குடித்தால் உடல் வயிறு குளுகுளுவென்று இருக்கும். ஒட்டுமொத்த உடலும் குளிர்ச்சியடையும். உடலின் வெப்பநிலை குறையும்.

அசிடிட்டியை போக்கும்

தண்ணீரை மண் பாத்திரங்களில் ஸ்டோர் செய்து வைத்துக் குடிப்பதன் மூலம் அசிடிட்டி ஏற்படாமல் தவிர்க்க முடியும்.

குறிப்பாக உணவுகளில் உள்ள அமிலததன்மையைக் குறைத்து குடலின் அமிலத்தன்மையை சமநிலையில் வைத்திருக்கச் செய்யும். இதனால் உடலின் பிஎச் அளவு சமநிலையில் இருக்கும்.

​உடல் மெட்டபாலிசம்

களிமண் பானைகளில் தண்ணீர் வைத்து தினமும் குடித்து வரும்போது ஜீரண ஆற்றல் அதிகரிக்கும்.

குடல் ஆரோக்கியம் மேம்பட்டு ஜீரணம் சரியாக நடக்கும் போது இயற்கையாகவே உடலின் மெட்டபாலிசமும் அதிகரிக்கும்.

75 ஆண்டுகளுக்குப் பிறகு கடுமையான வெயில் அடித்துக் கொண்டிருக்கிறது. இதனால் வெப்ப அலைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. இதைக் கட்டுப்படுத்த பல வழிமுறைகளை பின்பற்றுகிறோம்.

வெப்ப அலைகளின் காரணமாக சன் ஸ்டிரோக் ஏற்படும் ஆபத்து அதிகம். ஆனால் வெயில் காலத்தில் மண் பானையில் வைத்து தண்ணீர் குடிக்கும்போது சன் ஸ்டிரோக் வரும் ஆபத்து குறையும் என்று கூறப்படுகிறது.

Related Posts

Leave a Comment