உயிரோடு புதைக்கப்பட்ட அபிராமி! அம்மாவை காப்பாறுவாரா கார்த்திக்?

by Editor News

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் அபிராமியை கடத்தி வந்த தோப்புக்குள் கார்த்திக் நுழைந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, கார்த்திக் ரவுடிகளிடம் சண்டையிட்டு கொண்டிருக்க மறுபக்கம் ரவுடி மணியும் அவனது ஆட்களும் சேர்ந்து அபிராமியை உயிரோட புதைக்கின்றனர். இதனையடுத்து கார்த்திக் தன்னுடன் சண்டை போட்ட ரவுடிகளை அடித்து உள்ளே நுழைய மணியும் அவனது ஆட்களும் எதிரில் வருகின்றனர்.

அவர்களை பிடித்து எங்க அம்மா எங்க டா என்று கேட்க எங்களுக்கு தெரியாது என்று உண்மையை மறைக்கின்றனர். இதே சமயத்தில் கார்த்திக் அனுப்பிய லொகேஷனை வைத்து போலீஸ் இந்த தோப்புக்கு வந்து விடுகின்றனர். மணியையும் ரவுடிகளையும் மொத்தமாக கைது செய்து ஜெயிலுக்குள் அடைகின்றனர்.

இருப்பினும் கார்த்திக்கு அம்மா இந்த தோப்புக்குள் தான் இருக்கிறார் என்ற சந்தேகம் இருந்து கொண்டே இருக்கிறது. இதனால் உள்ளே சென்று அபிராமியை தேட மண் வெட்டி, மணி குவியல் இதையெல்லாம் பார்த்து சந்தேகப்பட்டு புதைக்கப்பட்ட இடத்தை தோண்டி அபிராமியை வெளியே எடுக்கிறான். மூச்சு பேச்சு இல்லாமல் இருக்கும் அம்மாவை தூக்கி கொண்டு ஹாஸ்பிடலில் அனுமதிக்கிறான்.

இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

Related Posts

Leave a Comment