பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் பல திருப்பங்கள் அரங்கேறி வருகின்றது.
பெண்களின் அடிமைதனத்தை மையமாக எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியல் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.
குறித்த சீரியல் பரபரப்பாக சென்று கொண்டிருந்த நிலையில், கடந்த சில மாதத்திற்கு முன்பு சீரியலின் நாயகனான குணசேகரன் திடீர் மாரடைப்பினால் உயிரிழந்த அவருக்கு பதில் நடிகர் வேல ராமமூர்த்தி நடித்து வருகின்றார்.
நீண்ட நாட்களாக சுவாரசியமில்லாமல் சென்ற சீரியலை தற்போது கதிர் டிஆர்பி- எகிற வைத்துள்ளார். கதிர் மட்டுமின்றி ஞானம் இருவரும் அண்ணனுக்கு எதிராக மாறியுள்ளனர்.
காட்டில் கத்திக் குத்து பட்டு கிடந்த ஜீவானந்தத்தின் நிலை என்ன என்பது தெரியாமல் அவரது மகள் வெண்பா தேடி தவிக்கின்றார்.
தர்ஷினிக்கு திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், தற்போது கோவிலுக்கு வந்துள்ளனர். இத்தருணத்தில் குணசேகரனுக்கு இடியை இறக்கியுள்ளது அங்கு நடந்த சம்பவம் ஒன்று.
இதுவரை நினைத்ததை நடத்திய குணசேகரனுக்கு இனி அடி விழப்போவதாக தெய்வம் வாக்கு கொடுத்துள்ளதால், குணசேகரன் ஆடிப்போய் நிற்கின்றார்.
இதனால் குறித்த சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது என்ன என்பதை எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.