பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் வெளியீடு!!

by Editor News

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் வருகிற 2024ஆம் ஆண்டு தை பொங்கலுக்கு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்குவது வழக்கம்.

இந்த சூழலில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு வழங்கப்படும். அதேபோல் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் வெளியிடப்பட்டுள்ளது. இதில் குடும்ப அட்டைதாரரின் பெயர், குடும்ப அட்டை எண், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் நாள், கிழமை ஆகியவை இடம்பெற்றுள்ளது.

Related Posts

Leave a Comment