மீண்டும் மும்பையுடன் ஹர்திக் பாண்டியா!

by Editor News

2024 ஆம் ஆண்டு ஐ பி எல் தொடருக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் 10 ஆம் திகதி நடைபெற உள்ளது ஏலத்திற்கு முன்பாக அணிகள் தங்களின் வீரர்களை பரிமாறிக்கொள்ளலாம் மேலும் வீரர்களை தங்கள் அணியில் இருந்து விடுவிக்கலாமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரராக இருந்த ஹர்திக் பாண்டியா கடந்த 2022 ஆம் ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு சென்ற அவர் குஜராத் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டார். அந்த ஆண்டு குஜராத் அணி ஐ பி எல் பட்டம் வென்றது. அதேபோல் கடந்த ஐ பி எல் தொடரில் குஜராத் அணி இறுதி போட்டியில் தோல்வியடைந்தது.

இந்நிலையில் ஹர்திக் பாண்டியா மீண்டும் மும்பை அணிக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வீரர்கள் ஏலத்திற்கு முன்பு அணிகள் தங்களிடம் உள்ள வீரர்களை விடுவிக்கவும் பரிமாறிக்கொள்ளவும் வழங்கப்பட்ட கால அவகாசம் நாளையுடன் நிறைவடைய உள்ளது. அதற்கு முன்பாக குஜராத் அணியில் இருந்து ஹர்திக் பாண்டியாவை மீண்டும் தங்கள் அணிக்கு கொண்டுவர மும்பை இந்தியன்ஸ் முயற்ச்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Posts

Leave a Comment