அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு …

by Editor News

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 4% அகவிலைப்படியினை உயர்த்தி வழங்கியமைக்காக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் நிர்வாகிகள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (28.10.2023) தலைமைச் செயலகத்தில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 1.7.2023 முதல் 4 சதவிகித அகவிலைப்படியை உயர்த்தி வழங்கியமைக்காக பல்வேறு அரசு அலுவலர்கள் சங்கங்கள், அரசு பணியாளர்கள் சங்கங்கள், ஓட்டுநர் சங்கங்கள், தொழிலாளர்கள் சங்கங்கள், போக்குவரத்து கழக சங்கங்கள், செவிலியர் சங்கம் மற்றும் பல்வேறு ஆசிரியர்கள் சங்கங்களின் நிர்வாகிகள் சந்தித்து தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 1.7.2023 முதல் 4 சதவிகித அகவிலைப்படியை உயர்த்தி வழங்கியமைக்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

Related Posts

Leave a Comment