சலீமா குடும்பத்தை குற்றம் சாட்டும் லைலா… கலர்ஸ் தமிழ் ஜமீலா சீரியல் அப்டேட் .

by Editor News

உண்மையான குற்றவாளி கைது செய்யப்பட்டு காசிம் விடுவிக்கப்படுகிறார்.

கலர்ஸ் தமிழின் ஜமீலா சீரியல் விறுவிறுப்பான கட்டத்தை நோக்கி நகர்கிறது.

நம்பிக்கை மற்றும் தனது கனவுகளுக்கு முக்கியத்துவம் அளித்து குடும்ப பிரச்சினைகளுக்கு மத்தியில், எப்படி தனது இசை பயணத்தை தொடர்கிறார் என்பதே ஜமீலா தொடரின் கதையாகும். அவளது இலக்கை அடைய அவளது குடும்பத்தினரே அவளுக்கு உதவ மறுக்கின்றனர். பிறகு தனது லட்சியத்தை அடைவதற்கான நம்பிக்கை எண்ணம் அவளது மனதில் துளிர்விடுகிறது. இந்த தொடரின் துணை கதாபாத்திரங்களாக ஐஸ்வர்யா பாஸ்கரன் – சலீமா வாகவும் மற்றும் கெளதம் சுந்தர்ராஜன் – ஹனிஃபா வாகவும் நடித்திருக்கிறார்கள்.

இதற்கிடையே கடந்த வாரம் ஜமீலாவின் நிச்சயதார்த்தம் தொடங்கிய நிலையில், காசிமை கைது செய்ய போலீஸ் வந்ததால் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். தற்போது, காசிம் கைது செய்யப்பட்ட பிறகு ஜமீலாவின் நிச்சயதார்த்தம் நிறுத்தப்பட்டது.

பின்னர் உள்ளூர்வாசிகள் மற்றும் சிசிடிவி காட்சிகள் மூலம் வாட்டர் கேன் பின்னணியில் உள்ள உண்மை தெரிய வந்து, உண்மையான குற்றவாளி கைது செய்யப்பட்டு காசிம் விடுவிக்கப்படுகிறார். பின்னர் ஜமீலாவிடம் பாடும் பயிற்சி எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறார் ஏகே.

Related Posts

Leave a Comment