மாண்டஸ் புயல் – புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் அரசு பேருந்துகள் நிறுத்தம்

by Editor News

மாண்டஸ் புயல் காரணமாக புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் அரசு பேருந்துகள் நிறுத்தப்படுவதாக புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் மாண்டஸ் புயல் சின்னம் உருவாகி இருக்கிறது. இந்த புயல் தற்போது வலுவிழந்து, வட தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால் இன்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழையும் அதி கனமழையும் பெய்யும் என்று எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் எச்சரிக்கையை தொடர்ந்து சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர், உள்ளிட்ட 6 மாவட்டங்களில் (இன்று) இரவு பஸ்கள் இயங்காது என தமிழக அரசு அறிவித்து இருந்தது.

இந்நிலையில், மாண்டஸ் புயல் காரணமாக புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் அரசு பேருந்துகள் நிறுத்தப்படுவதாக புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது. புதுச்சேரியில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னை மற்றும் காரைக்காலுக்கு இயக்கப்பட்டு வந்த அரசு பேருந்துகள் நிறுத்தப்படுவதாகவும், புயல் கரையை கடந்த பிறகு பேருந்துகள் இயக்கப்படும் என புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.

Related Posts

Leave a Comment