இதுக்கு பேரு தான் ட்விஸ்ட்.. டைவர்ஸ் பேப்பருடன் பாக்கியாவை சந்திக்கும் கோபி!

by Column Editor

கோபி – ராதிகா கல்யாணம் என்று முடிவாகிவிட்டது. தைரியத்தை வர வழைத்துக் கொண்டு இதுப்பற்றி பாக்கியாவிடம் பேச வேண்டும் என கோபி முடிவு எடுக்கிறார்.

ரசிகர்களின் பேராதரவுடன் உச்சக்கட்ட ட்விஸ்டில் சென்று கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவை விவாகரத்து செய்ய முடிவு எடுத்து விட்டார் கோபி.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ், பாரதி கண்ணம்மா சீரியல்களை ஓரங்கட்டி விட்டு மிகப் பெரிய திருப்பத்தில் சென்று கொண்டிருக்கிறது பாக்கியலட்சுமி சீரியல். இல்லத்தரசிகளின் கதை என்ற ஒன்லைனில் ஒளிப்பரப்பான இந்த சீரியலில் தற்போது கோபி – ராதிகா திருமண எபிசோடுகளால் மின்னல் வேகத்தில் ஒளிப்பரப்பாகி வருகின்றன. வீட்டுக்கு தெரியாமல் ராதிகாவுடன் பழகி வந்த கோபி பற்றிய உண்மை அவரின் அப்பாவுக்கு தெரிந்து விட்டது. அப்பவே கோபி மாட்டிக் கொள்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் கடையில் நடந்தது வேறு.

இதற்கிடையில்ராதிகாவை திருமணம் செய்வதில் கோபி உறுதியாக இருக்க, இதுப்பற்றி மயூ பாக்கியா வீட்டுக்கு வந்து சொல்ல, திரும்பவும் கோபி அப்பாவுக்கு எல்லா உண்மைகளும் தெரிய வந்தது. இனிமேல் விட்டால் இது சரியாக வராதுன்னு உண்மையை சொல்ல நினைத்தவர் விபத்தில் சிக்கிக் கொண்டார். மீண்டும் கோபிக்கு நல்ல காலம் அமைந்து எஸ்கேப் ஆனார்.

இந்நிலையில்கோபியின் அப்பா நிலைமை இப்போது மோசமாக உள்ளது. அவரால் இப்போது பேச முடியாது. அதனால் குடும்பத்திற்கு உண்மை தெரிய வாய்ப்பு இல்லாமல் போனது. இந்த நேரத்தில் ராதிகாவுக்கு ராஜேஷிடமிருந்து டைவர்ஸ் கிடைத்து விட்டது. கோபிக்கும் டைவர்ஸ் கிடைத்த உடனே கோபி – ராதிகா கல்யாணம் என்று முடிவாகிவிட்டது. தைரியத்தை வர வழைத்துக் கொண்டு இதுப்பற்றி பாக்கியாவிடம் பேச வேண்டும் என கோபி முடிவு எடுக்கிறார்.

விவாகரத்து பேப்பருடன் பாக்கியாவிடம் பேச வருகிறார். ஆனால் வீட்டில் நட்ப்பதோ வேறு. வீட்டில் சுமங்கலில் பூஜை நடக்கிறது. இதில் கோபியும் கலந்து கொள்கிறார். பாக்கியாவுக்கு விவாகரத்து கொடுக்க வந்த அதே நாளில் சுமங்கலி பூஜையில் பாக்கியாவின் தாலிக்கு பொட்டு வைத்து விடுகிறார். கடைசியில் விவாகரத்து பற்றி கோபியால் பேச முடியாமல் போகிறது, இது தான் இந்த வாரம் பாக்கியலட்சுமி சீரியலின் ஹைலைட்.

Related Posts

Leave a Comment