சரிவிலிருந்து மீண்ட பங்குச் சந்தைகள்… சென்செக்ஸ் 367 புள்ளிகள் உயர்ந்தது..

by Column Editor

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. சென்செக்ஸ் 367 புள்ளிகள் உயர்ந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் பங்கு வர்த்தகம் சரிவுடன் தொடங்கியது. இருப்பினும் சிறிது நேரத்துக்கு பிறகு பங்கு வர்த்தகம் படிப்படியாக ஏற்றம் கண்டது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், மாருதி சுசுகி மற்றும் ஆக்சிஸ் வங்கி உள்பட மொத்தம் 18 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், விப்ரோ மற்றும் டைட்டன் உள்பட மொத்தம் 12 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,983 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,358 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 93 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.262.73 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.2.24 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 366.64 புள்ளிகள் உயர்ந்து 57,858.15 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 128.85 புள்ளிகள் ஏற்றம் கண்டு 17,277.95 புள்ளிகளில் நிலை கொண்டது.

Related Posts

Leave a Comment