தூக்கு போட்டுக்கொள்ளும் வெண்பா.. பாரதி கண்ணம்மா சீரியல் கிளைமேக்ஸ் இதுதானா?

by Column Editor

கண்ணம்மா தவறு செய்யவில்லை என கடவுளே பாரதிக்கு உணர்த்தி விட்டது போல் போன வார எபிசோடு ஒளிப்பரப்பானது.

விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பல ஹிட் சீரியல்களில் ஒன்றுதான் பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் ஒளிபரப்பான காலம் முதல் ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்த வண்ணம் தான் இருந்தது. இடையில், இந்த சீரியலின் முக்கிய கதாபாத்திரமான கண்ணம்மா மாற்றப்பட்ட நிலையிலும், இந்த சீரியலுக்கான மவுசு குறையவில்லை. பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமானவர் ரோஷினி. இவர் சீரியலில் இருந்து விலகிய பிறகு இவரை போலவே இருக்கும் வினுஷா தேவியை புதிய கண்ணம்மாவாக களமிறங்கியது சீரியல் குழு. இருப்பினும் இந்த சீரியல் சமீப காலமாக ரசிகர்களுக்கு சலிப்பையே ஏற்படுத்தியுள்ளது.

சமீப காலமாக வெளியான எபிசோட்களில் கோர்ட் உத்தரவை மதித்து கண்ணம்மா வீட்டில் பாரதி தங்கி இருக்கிறார். இதனால் தினமும் பாரதிக்கும் – கண்ணம்மாவுக்கும் வீட்டில் சின்ன சின்ன சண்டை வருகிறது. இந்த 6 மாதத்தில் எப்படியாவது பாரதியையும் கண்ணம்மாவையும் சேர்த்து வைக்க நினைக்கிறார் சவுந்தர்யா. இந்த நேரத்தில் தான் நீதி காத்த அம்மன் கோயிலில் பாரதியும் கண்ணம்மாவும் பொங்கல் வைக்கின்றனர். அதில் கண்ணம்மா பக்கமே நீதி உள்ளது என்பதை உணர்த்தும் வகையில் அவரது பொங்கல் முதலில் பொங்கியது. ஆனால் இதை நம்பாமல் பாரதி தெய்வத்தையே சந்தேகப்படுகிறார்.

கண்ணம்மா தவறு செய்யவில்லை என கடவுளே பாரதிக்கு உணர்த்தி விட்டது போல் போன வார எபிசோடு ஒளிப்பரப்பானது. தற்போது இந்த வாரத்திற்கான ப்ரோமோவில் ரசிகர்களுக்கு மிகப் பெரிய ட்விஸ்ட் காத்திருந்தது. அதில், பாரதி, கண்ணம்மாவை மன்னித்து மீண்டும் வீட்டுக்கு அழைத்து செல்வது போல் காட்சிகள் இருந்தன. சரி, சீரியல் முடிவுக்கு வர போகிறது என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால் அதில் ஒரு ட்விஸ்ட் வைக்கப்பட்டிருந்தது. இது ரசிகர்களின் எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்தது. இந்நிலையில், மீண்டும் பழைய விஷயத்திற்கே வரும் பாரதி. கண்ணம்மாவை மனைவியாக ஏற்றுக்கொள்வதாக கூறினார். ஆனால் கண்ணம்மாசெய்த தவறை ஒப்புக்கொள்ள வேண்டும் என்று கண்டிஷன் போடுகிறார். அதற்கு கண்ணம்மாவும் கையெடுத்து கும்பிடு போடுகிறார். இந்த எபிசோடை பார்த்த ரசிகர்கள் மீண்டும் முதலில் இருந்தா என சலிப்படைந்துள்ளனர்.

இதனிடையே, சீரியல்வில்லியாக நடிக்கும் வெண்பா தூக்கில் தொங்குவது போல இருக்கும் ஷூட்டிங் காட்சிகள் வெளியாகியுள்ளது. பாரதி கண்ணம்மா சீரியலின் ஷூட்டிங் சீனில் வெண்பா தூக்கில் தொங்க முயற்சிப்பது போல காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இது ரசிகர்களின் ஆர்வத்தை இன்னும் தூண்டியுள்ளது. இது வருகிற எபிசோடில் ஒளிபரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை வெண்பா உண்மையில் தூக்குபோட்டுக்கொண்டால் சீரியலின் கதி என்னாவது என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Related Posts

Leave a Comment