கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 5…

by Editor News

கலை நிகழ்ச்சிகளுடன் பிக்பாஸ் சீசன் 5 கிராண்ட் ஃபினாலே நடைபெற்ற ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பிக்சாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே இன்று விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. ஐந்து பேர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் இன்றைய கிராண்ட் ஃபினாலேவில் யார் வெற்றியாளர் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. தற்போது இறுதிப்போட்டியாளர் ரேஸில் ராஜு, பிரியங்கா, பாவனி, நிரூப், அமீர் ஆகியோர் உள்ளனர்.

இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 5 கிராண்ட் ஃபினாலே நடைபெற்ற ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டங்களுடன் நடன நிகழ்ச்சி நடைபெறுகிறது. பிரம்மாண்ட அரங்கின் ஒளி வெள்ளத்தில் கமலிடம் ஓபனிங் காட்சிகள் காட்டப்படுகிறது. அப்போது பேசும் கமல், இது பிக்பாஸ் சீசன் 5 கிராண்ட் ஃபினாலே என்கிறார். இந்த காட்சியில் பார்க்கும் இறுதிப் போட்டியாளர் 5 பேரும் வெற்றியாளர்கள் போன்றுதான் எனக்கு தெரிகிறது என்கிறார் கமல்.

இதையடுத்து வருண் ஒரு பாடலுக்கு நடனமாடும் கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றுள்ளது. இதேபோன்று விஜய் டிவியின் கலக்கப்போவது பிரபலங்களின் கலாட்டாவும் ப்ரோமோவில் உள்ளது. கடைசியாக பேசும் கமல், ஒரு வெற்றியாளரை தேர்ந்தெடுக்கும் தினம்‌ இன்று என்று கூறுகிறார். இப்படி கலர்புல்லான நிகழ்ச்சிகளுடன் ப்ரோமோ வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் நிகழ்ச்சி காண ஆர்வமுடன் உள்ளனர்.

Related Posts

Leave a Comment