அபிராமியை அலறவிட்ட போன் கால்.! கார்த்திக் கொடுத்த வாக்கு…

by Editor News

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம்தோறும் இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் கார்த்திக் தீபாவிடம் உங்க பிரண்டு அம்முவை வர சொல்லுங்க நேர்ல பார்க்கலாம் என்று சொல்லிய நிலையில், இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, வீட்டில் உட்கார்ந்து இருக்க அப்போது திடீரென அவருக்கு ஒரு போன் கால் வர அந்த போனை பார்த்து பயந்துட்டு போன எடுக்கிறார். அபிராமியின் அம்மா போனில் பேச அவர் அருணாச்சலத்துக்கு 60 வயசு ஆகப்போகுது. அதனால உங்களுக்கு அறுபதாம் கல்யாணம் பண்ணலாம்னு முடிவு பண்ணி இருக்கேன். உங்க அப்பா ஊர்ல இல்ல அதனால நானே இந்த கல்யாணத்தை முன்னே நின்னு நடத்தி வைக்க போறேன் என்று சொல்கிறார்.

அபிராமி எதுக்கு மா அதெல்லாம்..? இப்போதான் வீடு மாதிரி பால் காய்ச்சி இருக்கும் அதனால இதெல்லாம் வேண்டாம் என்று சொல்ல அபிராமி நம்ம நீ கார்த்திக் கிட்ட போனை கொடு என்று அதட்டுகிறார். பிறகு கார்த்திக் ஃபோனை வாங்கி பேச அவரிடம் எங்க அம்மா அப்பாவுக்கு அறுபதாம் கல்யாணம் பண்ணலாம்னு முடிவு பண்ணி இருக்கேன் என்று சொல்ல கார்த்திக் பண்ணிடலாம் உங்களுக்கு என்ன உதவி வேணும்னாலும் நான் செய்கிறேன் என்று சொல்கிறான்.

பிறகு அபிராமி கார்த்தி இடம் எதுக்கு சம்மதம் சொன்ன? இப்ப இருக்கிற நிலைமையில இதெல்லாம் தேவையா மீனாட்சி வெளியே இருக்கா.. ஐஸ்வர்யா இந்த வீட்ல இல்ல அப்படி இருக்கும்போது நீயும் தீபாவை மட்டும் தான் எங்க கால்ல ஜோடியாக இருந்து ஆசீர்வாதம் வாங்குவீங்க. பையன சரியா வளக்கல கூட்டிட்டு வந்த மருமகள் நல்லவளா இல்ல என்று ஊர் உலகம் பேசறதுக்கா என்று வருத்தப்படுகிறார்.

பிறகு கார்த்திக் நானும் தீபாவும் ஜோடியாக ஒரு காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குற மாதிரி அருண் ஐஸ்வர்யாவும், ஆனந்த் மீனாட்சியும் உங்ககிட்ட ஆசீர்வாதம் வாங்குவாங்க என்று வாக்கு கொடுக்க அபிராமி நீ என்னமோ சொல்ற நான் இதை ஃபங்ஷன் வேண்டாம் என்று சொல்லலாம்னு தான் இருந்தேன் ஆனா இப்போ நீ சொல்லவே நடக்கிறது நடக்கட்டும் என்று சொல்கிறார். அப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப் போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியல் உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத் தவறாதீர்கள்.

Related Posts

Leave a Comment