சண்முகத்தை ஜெயிலுக்குள் தள்ள சௌந்தரபாண்டி போட்ட பலே பிளான்; ஒர்க் அவுட் ஆகுமா?

by Editor News

தமிழ் சின்னத்திரையில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சௌந்தரபாண்டி சண்முகத்தை தோற்கடிக்க வேண்டும் என்று ஒற்றை காலில் பூஜை செய்ய தொடங்கிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, சௌந்தரபாண்டி பூஜை செய்வதை பார்த்து இசக்கி, பாக்கியம் ஆகியோர் கலாய்க்க தொடங்குகின்றனர்.

சிவபாலன் உன்னால் மாமாவை ஒன்னும் செய்ய முடியாது என்று சொல்ல சௌந்தரபாண்டி கோபப்பட்டு அவனை அடிக்க துரத்த இசக்கி மாமா காலை கீழே ஊனிட்டீங்க என்று கலாய்க்கிறாள். அப்படியே மறுபக்கம் ஷண்முகம் தூங்கி கொண்டிருக்க பரணி அவன் பக்கத்தில் உட்கார்ந்து தனது மனதில் இருக்கும் காதலை பேச ஷண்முகம் தூங்குவது போல் நடித்து பேசுவது அனைத்தையும் கேட்கிறான். அடுத்த நாள் காலையில் சௌந்தரபாண்டி சண்முகத்தை தேர்தலில் நிற்க விடாமல் செய்ய என்ன செய்வது என்று யோசித்து கொண்டிருக்கிறான்.

இந்த சமயத்தில் சனியனின் மனைவி போன் செய்து தண்ணீர் வரல என்று சொல்ல சௌந்தரபாண்டி தண்ணீர் டேக்கை மூடி அதில் விஷத்தை கலந்து ஷண்முகம் கையால் திறக்க வைத்து அவன் மீது விஷம் கலந்ததாக பழியை போட்டு ஜெயிலுக்குள் தள்ளி தேர்தலில் நிற்க விடாமல் செய்யலாம் என்று திட்டம் தீட்டுகிறார். அடுத்து செய்ய வேண்டிய ஏற்பாடுகளை செய்து முடித்த பிறகு சனியனின் மனைவி ஷண்முகத்திற்கு போன் செய்து தண்ணீர் வரல, வீராச்சாமி போனை எடுக்கல.

நீங்க தான் எதாவது பண்ணனும் என்று சொன்னதும் ஷண்முகம் தண்ணீர் திறந்து விட கிளம்ப பரணி வேண்டாம் எனக்கு ஏதோ தப்பா தோணுது என்று சொல்கிறாள். ஷண்முகம் அதெல்லாம் ஒன்னும் இல்ல புள்ள என்று சொல்லி தண்ணீர் திறக்க கிளம்பி செல்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மிஸ் பண்ணாம பாருங்க.

Related Posts

Leave a Comment