கோலாகலமாக நடக்கப்போகும் ஐஸ்வர்யா-உமாபதி திருமணம்- ஒரு பத்திரிக்கையே இத்தனை ஆயிரமா?

by Editor News

90களில் நாம் பார்த்து ரசித்த பிரபலங்களின் வாரிசுகள் பலர் சினிமாவில் களமிறங்கி வருகிறார்கள்.

ஒரு சிலரின் வாரிசுகளுக்கு கோலாகலமாக திருமணம் நடந்து வருகிறது.

அப்படி கடந்த சில மாதங்களுக்கு முன் நடிகர் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவிற்கும், தம்பி ராமைய்யா மகன் உமாபதிக்கு மிகவும் சிம்பிளான முறையில் நிச்சயதார்த்தம் நடந்தது.

இவர்களின் திருமணம் வரும் ஜுன் மாதம் படு கோலாகலமாக நடக்க இருக்கிறது.

திருமணத்திற்கான முதல் பத்திரிக்கை அர்ஜுன் மற்றும் தம்பி ராமைய்யா குடும்பத்துடன் திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் அவர்களின் வீட்டிற்கு சென்று அழைப்பிதழ் கொடுத்துள்ளனர்.

ஜுன் 10ம் தேதி கெருகம்பாக்கத்தில் பல ஏக்கர் பரப்பளவில் அர்ஜுன் வாங்கி வைத்திருக்கும் தோட்டத்தில் தான் ஐஸ்வர்யா-உமாபதி திருமணம் நடக்க இருக்கிறாராம்.

திருமண பத்திரிக்கையை பாக்ஸ் போன்று பிரத்யேகமாக டிசைன் செய்துள்ளனர், அந்த ஒரு பத்திரிக்கையின் விலை சுமார் ரூ. 5 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது.

Related Posts

Leave a Comment