மறைந்த ஈரான் ஜனாதிபதி ரைசிக்கு பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி!

by Editor News

ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உள்ளிட்ட 9 பேரின் இறுதி சடங்குகள் தலைநகர் டெஹ்ரானில் நேற்று இடம்பெற்றிருந்தது.

இதனைத் தொடர்ந்து குறித்த ஒன்பது பேரினதும் பூதவுடல்கள் டெஹ்ரானின் டவுன்டவுன் வழியாக ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு ஆசாதி சதுக்கத்தை சென்றடைந்தது.

இதேவேளை இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் அலைகடலென திரண்டு அஞ்சலி செலுத்தினர். குறிப்பாக வெளிநாட்டு தலைவர்கள் பலரும் கலந்து கொண்டு உயிரிழந்த ஒன்பது தலைவர்களுக்கும் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

Related Posts

Leave a Comment