எங்க அண்ணனையா கொல்ல பாக்குற…. செளந்தரபாண்டிக்கு சாவு பயத்தை காட்டிய இசக்கி

by Editor News

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ரவுடி இடுப்பில் இருந்து கத்தி கீழே விழ பரணி ஷண்முகம் பக்கத்தில் ஓடி வந்து உட்கார்ந்து ஷாக் கொடுத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, ஷண்முகம் பரணியை பார்த்ததும் ஷாக்காகி நீ என்ன இங்கே என்று கேள்வி கேட்கிறான். அதன் பிறகு ரவுடிகள் இங்கே சண்முகத்தை போட்டு தள்ள தயாராகின்றனர். மறுபக்கம் சத்ரு யாகம் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் சண்முகத்தை பார்க்க வைகுண்டம் வீட்டிற்கு வந்த இசக்கியும் பாக்யமும் எப்படியாவது இந்த யாகத்தை நிறுத்த வேண்டும் என்ற முடிவுடன் வீட்டிற்கு வருகின்றனர். அப்போது அய்யர் நெய் கேட்க பாக்கியமும் இசக்கியும் சேர்ந்து நெய்க்கு பதிலாக பெட்ரோலை மாற்றி கொடுக்கின்றனர்.

அய்யர் நெய் என்று நினைத்து பெட்ரோலை ஊற்றியதும் யாகம் கொழுந்து விட்டு எரிய சௌந்தரபாண்டி தெறித்து ஓடுகிறார், அய்யர் எதிராளிக்கு கடவுள் அருள் அதிகம், அவனை ஒன்னும் பண்ண முடியாது என்று ஓடுகின்றனர்.

அதே போல் மறுபக்கம் ரவுடிகள் சண்முகத்தை குத்த சுற்றி வளைக்கின்றனர். இந்த நேரம் பார்த்து ட்ரைவர் சடர்ன் பிரேக் அடிக்க ரவுடிகள் பாய்ந்து போய் முன்னாடி விழுகின்றனர். பஸ்க்கு வெளியே முருகன் வேஷத்தில் 7 பேர் நின்று கொண்டிருக்க ஷண்முகம் ரவுடிகளை அடித்து துவைத்து துவம்சம் செய்கிறான். அடுத்து முத்துபாண்டிக்கு போனை போட்டு உன்னை அழிக்க நான் வரேன் டா என்று மரண பயத்தை காட்டுகிறான். தொடர்ந்து பரணியுடன் ஷண்முகம் ஸ்டேஷனுக்கு வருகிறான்.

பரணி இங்க எதுக்கு வந்த என்று கேட்க ஒரு முக்கியமான நபரை பார்க்க வந்ததாக சொல்கிறான். உள்ளே அழைத்து சென்று சூடாமணியை சந்திக்க வைத்ததும் பரணி அத்தையை கட்டிப்பிடித்து அழுகிறாள். சூடாமணி 20 வருடத்திற்கு முன்னாடி நடந்த கதையை சொல்ல தயாராகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மிஸ் பண்ணாம பாருங்க.

Related Posts

Leave a Comment