ஷண்முகத்தை அவமானப்படுத்தும் சௌந்தரபாண்டி.. அண்ணனுக்காக சிங்கப்பெண்ணாய் சீறும் வீரா

by Editor News

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சௌந்தரபாண்டி சிலம்பம் போட்டியை பெண்களுக்கான போட்டியாக மாற்றிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, சௌந்தரபாண்டி ருத்ரா என்ற பெண்ணை பார்த்து பேசி போட்டியில் கலந்து கொள்ள சொல்கிறார்.

மறுநாள் கோட்டிக்கான ஏற்பாடுகள் நடக்க சிறப்பு விருந்தினராக கலெக்டர் ஆகியோர் வருகின்றனர். பாக்கியமும் இசக்கியும் ஏற்கனேவே வந்து விட்ட நிலையில், இது பெண்களுக்கான போட்டியாக மாற்றப்பட்டதை பார்த்து ஷாக் ஆகின்றனர். அதன் பிறகு ஷண்முகம் போட்டி களத்திற்கு வர பெண்கள் போட்டியாக மாற்றப்பட்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்து சௌந்தரபாண்டியிடம் சண்டைக்கு போக, அவர் நான் பெண்களை மதிக்கிறவன், பெண்கள் முன்னேறணும்னு நினைக்கிறவன் என்று டைலாக் விட, பாக்கியமும் மனசுக்குள் திட்டுகிறாள்.

நீ இந்த போட்டியில் கலந்துக்கணும்னா போய் புடவை கட்டிட்டு பொட்டு வச்சிட்டு வா, நீ எல்லாத்துக்கும் ரெடியா இருப்பேனு தான் நாங்களே வாங்கி வச்சிருக்கோம் என்று புடவையை எடுத்து கொடுத்து கலாய்க்கின்றனர். இதனையடுத்து பெண்களுக்காக சிலம்பம் போட்டியில் ஜெயித்த ருத்ரா தில் இருந்தா என்கிட்ட மோதட்டும். ஆணா பெண்ணா என்பதையெல்லாம் நான் பார்க்க மாட்டேன் என்று சொல்கிறாள். ஷண்முகம், பெண் என்பதால் தயங்க ருத்ரா என்னை ஜெயிச்சிட்டு பணத்தை வாங்கிக்க என்று சொல்ல, கூட்டத்தில் இருந்து வீரா (புது வீராவாக கௌரி என்ட்ரி ) நான் வரேன் என்று குரல் கொடுக்க, ஷண்முகம் குடும்பத்தினர் நீ என்ன இங்கே என்று ஷாக்காகின்றனர்.

மேலும் நீ கலந்துக்க வேண்டாம் என்று சொல்ல, எனக்கு குருவே என் அண்ணன் தான், அவர்கிட்ட சிலம்பம் கத்துகிட்ட நான் தோத்து போய்டுவானா என்று களத்தில் இறங்க, முதல் ரவுண்ட்டில் அதிக அடி கொடுப்பவரே வெற்றியாளர் என அறிவிக்கப்படுகிறது. வீரா பலமாக அடிவாங்க அதை பார்த்து அனைவரும் ஷாக்காகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.

Related Posts

Leave a Comment