பூரி மசாலா ரெசிபி…

by Editor News

தேவையான பொருட்கள் :

உருளைக்கிழங்கு – 1/2 கிலோ

தக்காளி – 1

பெரிய வெங்காயம் – 2

பச்சை மிளகாய் – 5

கடலை மாவு – 2 கரண்டி

தண்ணீர் – 2 டம்ளர்

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – 2 மேசைக்கரண்டி

கடுகு – ஒரு ஸ்பூன்

கடலை பருப்பு – 2 கரண்டி

இஞ்சி பூண்டு விழுது – ஒரு கரண்டி

கருவேப்பிலை – 1/2 கரண்டி

கொத்தமல்லி இலை – சிறிதளவு

செய்முறை :

முதலில் உருளைக்கிழங்கை தண்ணீரில் நன்கு சுத்தம் செய்து கொள்ளவும்.

கழுவிய உருளைக்கிழங்கை குக்கரில் போட்டு மூன்று விசில் வரும் வரை வேகவைத்து கொள்ளவும்.

விசில் அடங்கியவுடன் உருளைக்கிழங்கை வெளியே எடுத்து அதன் தோலை முழுவதுமாக உரித்து தனியாக வைத்துக்கொள்ளுங்கள்.

பின்பு பச்சை மிளகாயை கீறியும், வெங்காயத்தை நீளவாக்கில் நைசாக கட் செய்தும் வைத்துக்கொள்ளவும்.

அடுத்து தக்காளியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி தனியாக வைத்துக்கொள்ளுங்கள்.

பிறகு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் கடலை பருப்பு மற்றும் கடுகு ஆகியவற்றை சேர்க்கவும்.

கடுகு நன்கு பொரிந்து வந்ததும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளவும்.

பிறகு நாம் ஏற்கனவே நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய் மற்றும் வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து 5 நிமிடங்களுக்கு வதக்கவும்.

பின்பு அதனுடன் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு மற்றும் நறுக்கி வைத்துள்ள தக்காளி ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும்.

பிறகு வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்து மசாலாவில் சேர்த்துகொள்ளவும்.

பிறகு மசாலாவில் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி அவற்றை 10 நிமிடம் நன்கு கொதிக்கவைக்கவும்.

மசாலா நன்கு கொதித்து வந்ததும் ஒரு கிண்ணத்தில் இரண்டு கரண்டி கடலைமாவு எடுத்து அதில் தண்ணீர் ஊற்றி கரைத்து மசாலா கலவையுடன் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

2 நிமிடம் கழித்து பொடியாக நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லி இலையை மசாலாவில் தூவி ஒரு முறை கிளறிவிட்டு இறக்கினால் ஹோட்டல் ஸ்டைல் பூரி மசாலா தயார்.

இந்த மசாலாவை சூடான புரியுடன் சேர்த்து அனைவருக்கும் பரிமாறுங்கள்.

Related Posts

Leave a Comment