எரிவாயு விலை அதிகரிப்பு குறித்த விசேட அறிவிப்பு..

by Editor News

சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்கும் தீர்மானத்தை பண்டிகை காலத்தை கருத்திற்கொண்டு லிட்ரோ நிறுவனம் கைவிட்டுள்ளது.

அமெரிக்க டொலரின் பரிவர்த்தனைகள் மற்றும் சர்வதேச விலை ஏற்ற இறக்கங்கள் என்பவற்ற கருத்திற் கொண்டு உள்நாட்டில் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட வேண்டும்.

இருப்பினும் எதிர்வரும் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு பிறப்பு உள்ளிட்ட பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு டுவைசழ புயள நிறுவனம் இந்த மாதம் எரிவாயுவின் விலையை அதிகரிப்பதில்லை என தீர்மானித்துள்ளது.

அதாவது, இந்த மாதம் 12.5 கிலோ சமையல் எரிவாயு கொள்கலனின் விலையை 3,565 ரூபாய் (விலை – கொழும்பு மாவட்டத்துடன் தொடர்புடையது) எனப் பேணுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Related Posts

Leave a Comment