உங்களுக்கும் கண் திருஷ்டி வந்து இருக்கும்! அப்போ இதை செய்து பாருங்க!!

by Editor News

உலகில் கண் திருஷ்டிக்குப் பயப்படாதவர்களே இல்லை.

கண் திருஷ்டி என்பது எல்லோரும் தன்னை நோக்குதல் என்பது தான் அதனுடைய அர்த்தம். ஒட்டுமொத்த பார்வையும் தன் மேல் விழுந்திருக்கிறது என்று சொல்வார்களே அதுதான் இதன் பொருளாகும்.

இதனை ஒரு சில அறிகுறிகள் வைத்து தெரிந்துக்கொள்ளலாம்.
குறிப்பாக இந்த தோஷம் உள்ளவர்கள் அதிக சோர்வுடன் மற்றும் இனம் புரியாத கை, கால் வலிகளுடன் இருப்பார்கள்.

மேலும் நன்றாக ஓடி விளையாடி கொண்டிருந்த குழந்தை திடீரென அழுது கொண்டே இருந்தால், புதிதாக கட்டிய வீட்டில் அதுவரை இல்லாத பணக்கஷ்டம், மனக்கஷ்டம் போன்ற பிரச்சினைகள் மேலோங்கி காணப்படும்.
இவை எல்லாம் கண் திருஷ்டி தோஷத்தினால் உருவானது என்று நம்பப்படுகிறது. அந்தவகையில் இவற்றை நீக்க சில எளிய பரிகாரங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றை இங்கே பார்ப்போம்.

பரிகாரங்கள்

சதுர அளவிலான வெள்ளை துணியில் காய்ந்த மிளகாய், கற்பூரம், கல் உப்பு, வெண்கடுகு மற்றும் மண்னை சேர்த்து கட்டிக்கொள்ளுங்குகள்.

கட்டிய மூட்டையை வலது பக்கம் இருந்து இடது பக்கமும், இடது பக்கம் இருந்து வலது பக்கமும் தலையை 3 முறை சுற்றி, வெளியில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி எரித்து விட்டு திரும்பி பார்க்காமல் வீட்டிற்குள் செல்ல வேண்டும்.

குறிப்பு:- ஞாயிறு கிழமை இரவு நேரத்தில் செய்வது நல்லது.

Related Posts

Leave a Comment