பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகிய அடுத்த பிரபலம்! கொந்தளிக்கும் ரசிகர்கள்;

by Column Editor

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் 700 எபிசோடுகளை கடந்து விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது.

இந்த சீரியலில் கண்ணம்மா கேரக்டரில் ரோஷினி ஹரிபிரியனும், பாரதி கேரக்டரில் அருண் பிரசாத்தும் நடித்தார்கள். இவர்கள் இருவரின் காம்போ, தமிழில் இந்த சீரியல் பிரபலமாக மிக முக்கியமாக காரணமாக அமைந்தது.

விஜய் டிவியில் நம்பர் ஒன் சீரியல் என்ற பெருமையையும் இந்த சீரியல் தக்க வைத்துக்கொண்டிருந்தது. ஆனால், இந்த சீரியலில் இருந்து விலகுவதாக ரோஷினி ஹரிபிரியன் அறிவித்தார்.

சினிமாவில் வாய்ப்பு கிடைப்பதால் சீரியலில் இருந்து விலகுவதாக கூறினார். இதனால் அவருக்கு பதில் விதுஷாஸ்ரீவை கண்ணாம்மா கேரக்டரில் நடிக்க வைத்தனர்.

இதனைத்தொடர்ந்து, புதிய கண்ணம்மாவை ஏற்க ரசிகர்கள் தயங்கியதாலும், கதைக்களம் மாற்றப்பட்டதாலும் இந்த சீரியலை பார்ப்பதையே பலர் நிறுத்தினர். இதனால் சீரியலின் டிஆர்பி மளமளவென சரிந்தது.

தொடர்ந்து, ரோஷினி விலகுவதற்கு சில மாதங்களுக்கு முன் அகில் கேரக்டரில் நடித்த அகிலனும் சினிமா வாய்ப்பு கிடைத்ததால் சீரியலில் இருந்து விலகினார்.

தற்போது மற்றொரு புதிய திருப்பமாக இந்த சீரியலில் இருந்து விலகுவதாக அஞ்சலி கேரக்டரில் நடித்து வரும் கண்மணி மனோகரனும் அறிவித்து அதிர்ச்சியளித்துள்ளார்.

அவருக்கு பதில் அருள்ஜோதி, அஞ்சலி கேரக்டரில் மாற்றப்பட்டுள்ளாராம். இவர் தற்போது நினைத்தாலே இனிக்கும் சீரியலில் நடித்து வருகிறார். இதனால் வெறுப்படைந்த ரசிகர்கள் சீரியல் கதை விறுவிறுப்பு இல்லை நிறுத்திவிடலாம் என ரசிகர்கள் கூறி வருகிறார்களாம்.

Related Posts

Leave a Comment