நெத்திலி மீன் குழம்பு: எப்படி தயார் செய்வது?

by Column Editor

அசைவப் பிரியர்களுக்கு மீன் குழம்பு என்றாலே வாயில் எச்சில் தான் ஊறும். என்னதான் மற்ற அசைவ உணவுகளை எடுத்துக்கொண்டாலும் கடல் உணவுகளில் இருக்கும் ருசியே தனிதான்.

ஆம் பல வகையான மீன்களில் குழம்பு வைத்து சாப்பிட்டு அலுத்துப் போனவர்களுக்கு நெத்திலி மீன் சுவையில் ஒரு வரப்பிரசாதம் என்றே கூறலாம். சுவையான நெத்திலி மீன் குழம்பு தயார் செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்
நெத்திலி மீன் – அரை கிலோ

வெங்காயம் – 100 கிராம் (நறுக்கியது)

தக்காளி – 100 கிராம் (நறுக்கியது)

இஞ்சி – சிறுதுண்டு

பூண்டு – 6 பல்

புளி – எலுமிச்சை அளவு (கரைக்க)

தனியாதூள் – 2 டீஸ்பூன்

மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்

கடுகு – சிறிதளவு

சீரகம் – 1 டீஸ்பூன்

கறிவேப்பலை – சிறிதளவு

உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப

செய்முறை:

நெத்திலி மீனை சுத்தம் செய்து மஞ்சள் தூள், உப்பு சேர்த்து சிறிது நேரம் ஊற வைக்கவும்.

இஞ்சி, பூண்டை தட்டிக் கொள்ளவும்.

ஒரு பாத்திரதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

வெங்காயம், தக்காளி இவற்றை ஒன்றன் பின் ஒன்றாக வதக்கவும்.

தட்டிய இஞ்சி, பூண்டு சேர்த்து வதங்கிய பின் புளிக்கரைச்சலை ஊற்றவும்.

மிளகாய் தூள், தனியாதூள், போதுமான உப்பு சேர்த்து புளிநீர் கொதித்ததும், நெத்திலியை போட்டு குறைந்த சில நிமிடங்கள் வைத்திருந்து இறக்கவும்.

தற்போது காரசார மணமான நெத்திலி குழம்பு தயார். இதனை சூடான சாதத்துடன் வைத்து சாப்பிட ருசியில் திரும்ப திரும்ப சாப்பிட தோன்றும்.

Related Posts

Leave a Comment